முள்
சன்னலின் வெளியேபசிக்கழும் குழந்தை
பார்த்துக்கொண்டே
விழுங்கிய உணவு
தொண்டையில் முள்ளாய் ...!
*****************************
பால பாடம்
உன் முடி
சாமிக்கு என்றதும்
என் முடி சாமிக்கு
எப்படி பத்தும்
கேட்ட
மழலை
ஊமையாக்கி
கற்றுக்கொடுத்தது
ப(பா )ல பாடம்..
**********************
அம்மாவின் சூடு
தரும் வலியை விட
அப்பாவின் சுடுசொல்
தரும் வலி அதிகம்
*********************
**********************
அம்மாவின் சூடு
தரும் வலியை விட
அப்பாவின் சுடுசொல்
தரும் வலி அதிகம்
*********************
பூமி பொங்கி சுட்டது
வானம் கண்ணீர் விட்டது
மழை..
*********
காதலை தெரிவிக்க
ஆவிபிரித்து
தூது அனுப்பியது கடல்
அழகில்லை எனவானம்
சொன்னதை
சொல்லி அழுது
மறித்து விழுந்தது
மழையாக....
******************
கீழே விழும் பொழுது
அழுதபடியே விழுந்த மழையை
ஆறுதல் படுத்தியது கடல்
நிச்சயம் உன்னை ஒருநாள்
உயரத்தில் ஏற்றுவேன் என்று..
*****************************************
கருப்பு அழுக்கு என
விரட்டிவிட்டது வானம்
பொங்கி அழுதது மேகம்
"மழை"
*********
கருப்பு அழுக்கு என
விரட்டிவிட்டது வானம்
பொங்கி அழுதது மேகம்
"மழை"
*********
இறுக்கிப் பிடித்து
இறைஞ்சுகிறாய்
போனால் போகட்டும் என
விருந்தளிக்கிறேன்
"பசி"
6 comments:
மிகவும் அருமை. தொடர்ந்து எழுதுங்க மேடம்.
-arattai girl
அழகு இந்தக் கவிதை..!
அழகு இந்தக் கவிதை..!
சில கவிதைகள் அனக்கராம் கவிதைகள் வார்த்தைகளை மாற்றி போட்டாலும் அர்த்தம் வருகிறது தொடர்ந்து எழுதுங்கள் தோழி ! வாழ்துகள்,
அம்மாவின் சூடு
தரும் வலியை விட
அப்பாவின் சுடுசொல்
தரும் வலி அதிகம்
உண்மைங்க !
யாராச்சும் திட்டினால் "அழற" அளவுக்கு கோபம் வரும் எனக்கு !
Post a Comment