Thursday, April 28, 2011

மிரட்டல்



இரவில் வந்து
சாமி வயிற்றைத்
 தடவும்

கொட்டை முழுங்கினால்
வயிற்றில் 
மரம் முளைக்கும்

இடது கையூன்றி 
சாப்பிட்டால்
உணவு தரைக்கே 
உனக்கில்லை 

அதோ வரான்
மூணு கண்ணன் 
உறங்காத கண்களை நோண்ட
என்றதும் 
தாயை 
இறுக அணைக்கும் 
குழந்தை 
அறியுமோ
இவை யாவும்
பொய்யென !

No comments: