Tuesday, May 10, 2016

எனக்குப்பிடித்த டிவிட்டர்கள் 2015 -பகுதி 2

எவ்வளவோ பேரை இங்கே பார்த்தாச்சு..கடந்து வந்தாச்சு..கை கோர்த்து நடந்தும் வந்தாச்சு.. சிலர் மட்டுமே இன்னமும் அப்படியே மனதில் நிற்கின்றனர்.. :) followers கிடைக்கும் வரை நம்மைச் சகித்துக் கொள்ளும் அமாவாசைகள்  , நம்மை விட அதிகம் கடந்த பின்பு ,  நாகராஜ சோழன்கள் ஆகி டாட்டா காட்டிட்டுப் போயிட்டே இருக்காங்க 2011ல இருந்தே அப்படித்தான் :))
@kryes  : நிறைய யோசிச்சேன்..ஏற்கனவே குறிப்பிட்ட நபர் தானே குறிப்பிடணுமா என்று..ஆனால் தமிழ் , இலக்கியம் , அறிஞர்கள் சார்ந்த தகவல்கள் பல இடங்கள் போய்ச் சேரணும் என்றே குறிப்பிடுகிறேன்..
தனிப்பட்ட விருப்பு,வெறுப்புகள் ஒதுக்கிட்டு ,நிதானமாக தகவல்கள் சரியாகச் சென்றடைய எழுதும் பழைய பன்னீர் செல்வமாக அவர் திரும்ப எழுதணும் என்பதே என் வேண்டுகோள்..:) பெரியார், வ.உ..சி..போன்ற தலைவர்கள் பற்றி இவர் எழுதும் தொடர் கீச்சுக்கள் மிகப் பிடித்தமானவை..தற்போது ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை தொடர் மிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது..எதற்கென பார்ப்பனர்கள் எனும்போது சற்று எரிச்சலாக வரும். ஆனால் இணையத்தில் உள்ள சாதிப் பிரியர்கள் நடவடிக்கைகள் கூர்ந்து கவனித்தால் இவர் பேச்சுக்கு அவர்கள் நியாயம் செய்வதாகவே தோன்றும்.

@iamvariable: நல்ல சமூக சிந்தனையாளர்..இவரையும் முன்பே குறிப்பிட்டு இருக்கிறேன் ..ஆனால் மறுபடியும் குறிப்பிடக் காரணம், RJ பாலாஜி,சித்தார்த் என பிரபலங்கள் பேரிடரின் போது இறங்கி வேலை செய்திடினும், இவர் முன்பிருந்தே அதைக் கச்சிதமாகச் செய்து வருகிறார் ..கவனித்த வரையில் இவருக்கு இருக்கும் தலைமைப் பண்பு அசாதாரணமானது . சரியான திட்டமிடல் ,விவரங்கள் சேகரித்தல் , அதற்கேற்ப உதவ வரும் மற்றவர்களை redirect செய்தல் ,என்ன நடக்குது அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பது வரை அப்டேட் இறுதியில் கணக்கு ஒப்படைத்தல் என அத்தனையும் perfect .. :)
தர்மம் என்பது விளம்பரக் கருமாந்திரம் அல்ல என்ற தலைப்பில் தினமலர் எழுதிய கட்டுரை தான் செம ஹைலைட் செம செருப்படி டு ஸ்டிக்கர் பாய்ஸ்

இவர் படபடவென ஸீரோ following வந்ததும் உடனே தாம் தூமென விமர்சனங்கள்..எனக்கே அந்த செயல் வினோதமாகத் தெரிந்தாலும் , அதற்காக அவரின் அத்தனை செயல்களையும் ஒரேயடியாக மறந்து விமர்சனம் செய்தது அதிகப்படி..எக்கச்சக்க following செய்துட்டு followers காக கெஞ்சுனதும் ,  ஏறவும் கொத்தா அன்பாலோ செஞ்சுட்டு எழுதறவங்கள ஆளுமைன்னு கொண்டாடுறீங்க ..உங்களுக்குத் தேவையான ஆளுன்னா ஒரு மாதிரி , மற்றவர்களிடம் மட்டும் நியாயங்கள் பேசுறப்ப யோசிக்கவே மாட்டீங்களா ? :) எங்க நீங்க ரொம்பக் கொண்டாடுபவர்களிடம் சற்றே உங்க மாற்றுக்கருத்து சொல்லிப்பாருங்க அவ்வளவு நாள் பழகின முகத்தாட்சண்யமே இல்லாம மூஞ்சியில கரியப் பூசுவாங்க..  அவ்ளோதான் ட்விட்டர்.. பிடிச்சதை எடுத்துக்கணும்..ரொம்பச் சகிக்கவே முடியல எனில் விலகிப் போயிடனும்..அவங்களே அடடா !எனும் நினைக்கும் அளவுக்கு..யாரோக்களை விட மிக நெருங்கிப் பழகியவர் திடீர் விலக்கம் எனில் ,  இறுக்கம் தான் எனது பதில்..
@Jappan_ragu : 40 லட்சம் பெறுமானமுள்ள பொருட்களை , வெகு அழகாக சேரிடம் சென்று சேர்த்தது ஆச்சர்யம்..

@ParisalCafe : கடலூர் மாவட்டத்தில் உதவச் சென்ற பலர் அங்குள்ள ஆதிக்கச் சாதியினரால் பல இன்னல்களைப் பெற, அவர்களையும் மீறி தாழ்த்தப்பட்ட ,பாதிப்பட்ட மக்களுக்குச் சென்று சேர்த்தார்கள்..அதற்கு ஒரு ஷொட்டு ..
இவங்கள மாதிரி இன்னும் பல பேர் பல விதமாக சென்னை &கடலூர் பேரிடருக்கு உதவினார்கள்..அவர்கள் அனைவர்க்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் :))

bashhu : ம்யூச்சுவல் ப்ளாக் ல இருக்கிற ஆளைப் பற்றி குறிப்பிடுவது எனக்கே வினோதமா இருக்கு.. :) எனக்கு அவர் கருத்துக்கள் செட் ஆகல..ஆனா வெறுப்பு இல்ல அவ்ளோதான். இந்தப் பேரிடரில் இவரது பணி அசாத்தியமானது.



2015 ஆம் ஆண்டின் மிக மோசமான நிகழ்வாக சென்னை &கடலூர் அதன் சுற்றுப் புற கிராமங்கள் வெள்ளப் பேரிடரில் சிக்கியது..

இவ்வாண்டில் எனைக் கவர்ந்த முதல் பதிவு 

அமீர்கானும் மத சகிப்பின்மையும் 

பொதுவாழ்வில் அப்பழுக்கற்ற ஏ.எஸ் பொன்னம்மாள் மறைவு .அப்ப வந்த கட்டுரை 

பத்துதான்  படிச்சு இருக்காங்களாம் இந்தம்மா....ஆனா டபுள் டிகிரி வாங்கினவங்களால் கூட இவ்வளவு தன்னம்பிக்கையுடன் ஆங்கிலம் பேச முடியாது.. அதுவும் வெள்ளம் சூழ்ந்த மோசமான தருணத்தில் இவ்வளவு வெள்ளந்தியாக சிரித்துக்கொண்டே ..அதற்கான காணொளி 

வானிலை அறிக்கை ரமணன் பற்றிய மீம்கள் தூள் பறந்தன..அதுல இந்தப் பயபுள்ள டப்ஸ்மாஷ் தான் டாப்
1
2

 இந்த வெள்ளத்திலும் இப்படி ஒரு மகாபுருஷர் :))

கண் முன்னால் ஒரு மனிதன் வெள்ளத்தில் சிக்கும் போது காப்பாற்றப் போய் நமக்கும் ஆபத்து வந்துட்டா என்ன பண்றது என்றில்லாமல் சட்டென ஒரு மனிதச்சங்கிலி உருவாக்கி காப்பாற்றிய சென்னைவாழ்மக்களுக்கு ஒரு வந்தனம் 🙏🙏


சென்னை செயற்கைப் பேரிடரில் பணியாற்றிய அத்தனை தன்னார்வலர்கள் பற்றியும் சேகரிப்பது சிரமமே..எனினும் சில நல்ல உள்ளங்கள் பற்றியபதிவுகளைச் சேகரித்து வைத்திருக்கிறேன்
அவற்றில் சில
ஆட்டோடிரைவர்
இதிலே பலர் இருக்கிறார்கள் 
இது எம் தமிழ்நாடு 
ராணுவத்தின் அசகாய பணி 
சென்னையை மீட்ட உண்மை நாயகர்கள் பற்றிய விகடன் பதிவு 
தன்னார்வலர்கள் பற்றி கேள்வியும் ஆச்சரியமுமான ஒரு கடலூர் தாத்தா 
தன்னார்வலர்களுக்கு கங்கை அமரனும் சன் டிவியும் சேர்ந்து செய்த சமர்ப்பணம்



எப்படி தூர்வாரனும் ஏன் என நம்மாழ்வார் விளக்கம் 

இந்தப் பேரிடர் மனிதாபிமானமிக்கவர்களை அடையாளம் காண்பித்துச் சென்றிருக்கிறது இது போல 

சென்னைக்கு ஒவ்வொரு ஆறு எங்கிருந்து வந்தது என்ற அருமையான விளக்கம்
ஒரு வடக்கன் இந்த சென்னைப் பேரிடரிலும் பேசிய சில்லறைத்தனத்துக்கு fb ல அனுஷா என்பவர் கொடுத்த செருப்படி :) 

இவ்வுலகம் வெகு வேகமாகப் போகின்றது. நாம் விழுந்தால் கூட கேட்க ஆளில்லை என்ற கவலையோடு ஓடியவர்களுக்கு சென்னைப் பேரிடர் அழிவிலும் ஓர் ஆக்கத்தை பெரிய தாக்கத்தை ஏற்படுத்திச் சென்று இருக்கிறது.  எல்லார் மக்களின் மனத்திலும் இன்னமும் ஈரம் இருக்கிறது என்றுணர்த்தி சென்றிருக்கிறது மழை.  அதிலே ஓடிச்சென்று உதவிய முகமறியாத கரங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றியும்..!

இது போல பலரைப் பிடித்திருக்கிறது என்று நான் ப்ளாக் எழுதினாலும் அதிலே சிலருடன் இப்போ பேசுவதேயில்லை மாற்றம் ஒன்றே மாறாதது. வெளிப்படையாகப் பேசுவது என்பது ஒருவரை பாராட்டும் போதே விரும்பப்படுகிறது.. நமக்குப் பிடிச்சவங்க தவறு செய்யும்போது தான் ரொம்பக் கோவம் வருது. ஆனா அதைச் சொல்ல முடியாவிடில், கேள்வி கேட்டாலே உடனே விலகிச்செல்லும் நட்பு  என்ன நட்பு.. எவரோ செய்த தவறுக்காக ஒட்டுமொத்த இணைய நட்பே இப்படித்தான் என்று ஒருவரையறைக்குள் கொண்டு வர விருப்பமில்லை. ஆனால் சற்று இடைவெளி விட்டுப் பழகுவதே சாலச்சிறந்தது என்ற எண்ணம் வந்திருக்கிறது. 

திடீரென நான் உபியாக மாறி விட்டேன் என்று பலவிதமான விமர்சனங்கள்.  ஒவ்வொரு அரசு ஊழியர் வீட்டிலும் திமுகவால் பலன் அனுபவித்த நன்றி சிறிதளவேனும் இருக்கும். அதே போல திமுக மீதான விமர்சனங்களையும் ஓர் உரிமையாகவே வைப்பார்கள்.. அது போலத்தான் நானும்.. 2011 ல் ஒரு பொதுஜனமாகவே என் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறேன். அப்பொழுது இருந்தவர்களுக்கு என்னைத் தெரியும்.. ஆனால் நேர்மையாக விமர்சிக்க நான் ரெடி..நடுநிலைகள் என்பவர்களிடமோ மாற்றுக் கட்சியினரிடமோ அது அறவே இல்லை எனும்போது நம் நேர்மையை ஏன் இவர்களுக்கு நிரூபிக்க வேண்டும் என்றாகிவிட்டது . தங்கள் சாதியினருக்காக அவர்கள் பலனடைய வேண்டும் என்பதற்காக பொது ஜனம் பற்றிக் கவலைப்படாமல் ஒரு சார்பான நடுநிலைகள் பேசும்போது திமுக குறைகளைப் பற்றிப் பேச அலச எனக்கு விருப்பமில்லை . ஒவ்வொரு நடுநிலைகளும் சந்தர்ப்பம் வாய்க்காத குமாரசாமிகள்.  அதற்கு மேல் ஊடகங்கள் . ஒரு முதலமைச்சரே தண்டனை பெற்று உள்ளே சென்று வந்தபின்பும் அதன் காரண காரியங்களை மக்களிடம் எடுத்துச் செல்லாமல் பீப் பாடலுக்கும் நமீதாவுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அதி அக்கறையாளர்கள்.. இதிலே நானும் ஒரு சராசரியாகவே இருந்துவிட்டுப் போகிறேனே.. 
நான் நானாகவே இருப்பதாக நம்புகிறேன்.. இதிலே என்னைக் கேட்காமல் என்னைப் பற்றி நீங்கள் வைத்த பிம்பம் உடைந்திருந்தால் பொறுப்பேற்க இயலாது.. 
எனது ட்விட்டர் பயணம் மெதுவானதே.. பிடிச்சதை பிடிச்சவங்களோட பேசி பிடிக்காதவர்களை வம்படியாக ஒதுக்கி ஆயிரம் பெண்ணியம் பேசினாலும் பிடிக்காத பெண் எனில் வார்த்தைகளிலாவது வன்புணர நினைக்கும் ஆட்கள் மத்தியில் இவ்வளவு நாள் நிலைத்து நின்றதே எனக்குப் பெரிதுதான்.. 
அதே நேரம் நான் ஒருமுறை கூட பேசி இராத எவர் என்றே தெரியாத ஆட்கள் எப்பொழுதாவது நம்மைப் பற்றி நல்லதாக நினைத்ததைச் சொல்லும்போது மனசுக்குள் ஓர் ஆசுவாசம் விரவுவதை தவிர்க்க முடியவில்லை.. :) ஏனெனில் வெறும் எழுத்தில் நம் கோபம் ஆதங்கம் திமிர் எனப் பன்முகங்களையும் காட்டிய பிறகும்கூட இவங்களுக்கு எப்படி இவ்ளோ மதிப்பு அதுவும் நம்ம மேல என்ற ஆச்சரியம்தான் :) அது போன்ற நெகிழ்வான தருணங்களும் என் எழுத்தை மேம்படுத்த நண்பர்கள் கொடுத்த விமர்சனங்களும் ஊக்கங்களும் தான் என் எழுத்துக்களை இங்கே இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன :)  நாச்சியார் திருமொழி விளக்க உரைகள் அவர்களாலேயே சாத்தியம் ஆனது. நாம் செய்கின்ற காரியங்கள் நமக்கே பிடிக்குமே அது போல எனக்கு இந்த விளக்க உரைகள் 

அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி !!!



Wednesday, January 6, 2016

எனக்குப்பிடித்த டிவிட்டர்கள் 2015-பகுதி 1

சும்மா விளையாட்டா 2012ல எழுத ஆரம்பிச்சது..ஓர் ஆத்ம திருப்திக்காக .. இந்த ஆண்டும் எழுதத் தோனுச்சு :)அன்றிலிருந்து இன்றுவரை என் மனதில் உள்ள மதிப்பு மாறாமல் இருப்பவர்கள் சிலரே..எனக்கு அவங்க மேல பிம்பம் உடைஞ்ச மாதிரி என் மீதான அவங்க பிம்பமும் ஏதேனும் ஒரு தருணத்தில் உடைஞ்சு இருக்கலாம்..2011ல் வந்த நாள் முதல் நான் நானாகவே இருக்கிறேன் என இன்னமும் நான் நம்புகிறேன்..இன்னமும் கூட சிலரைப் பின்தொடரவிடிலும் எனக்குப் பிடிக்கும்..ஆனா மாறுபட்ட எண்ண அலைகள் , முன்னம் பெற்ற அனுபவம் ஒதுங்கியே இருக்கச் செய்கிறது.. இசை , அரசியல் ,வேறு சில ரசனைகள் 60% ஒத்துப்போகும் நபர்களை பின்தொடர்கிறேன்.

@RelaxplzzTamil  நாம் எழுதும் டிவிட்டை காப்பி அடிச்சு சொந்தமா போடுபவர்களுக்கு மத்தியில் , அதைப் புகைப்படத்தில் அச்சேற்றி  நம் பெயரோடு நமக்கே mention இடுவார்கள்.. இதுவே வாட்சப்பில் நம் பெயரோடு உலா வரும் அப்ப இனம் புரியாத மகிழ்ச்சி :) சமீபத்தில் எனது ட்விட்டர் pin ட்வீட் என் அண்ணன் தோழர் மூலமாக எனக்கே வந்தது..எத்தனை சுற்று சுற்றியிருக்கக் கூடும் என்பதே தனி மகிழ்ச்சியாக இருந்தது :)


@AmadhavaVarma தொல்லியல் ஆய்வாளர்.  மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் சிற்பங்கள் மீது கொண்ட காதல் இவரைப் பின் தொடர வைத்தது..பல அரிய சிற்பங்களை இவர் படமெடுத்துப் போடும் போது ஆச்சரியமாக இருக்கும்..சிற்பங்கள் மீதும் அவற்றை அறியவும் ஆர்வம் உள்ளவர்கள் பின் தொடரலாம்..ஆர்வத்திற்கு தீனி நிறைய கிடைக்கும். பழந்தமிழர் சிற்பக்கலை பற்றி வருங்கால சந்ததியினர் அறிய இவரைப் போன்றவர்கள் செய்யும் முயற்சிக்கு ஒரு வந்தனம்.

@KollywoodGifs   தமிழ் சினிமாக் காட்சிகளை தகுந்த தருணத்திற்கு gif படமாக்கி போடுவதில் வெகு கெட்டி..
@Mythili_Br   நகைச்சுவை உணர்வுள்ள பெண் கீச்சர்..எந்த சென்சேஷனல் டாபிக்கிலும் தலைக் கொடுக்காமல் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டே இவர் போடும் ஜாலி கேலி டிவிட்கள் அதகளம்..குறிப்பாக இவர் மிச்சர் சாப்பிட இடைஞ்சலா இருக்கிறதைக் குறை சொல்லி ஒரு டிவிட்லான்கர் போட்டாங்க பாருங்க :)) படிச்சுப்பாருங்க நாடி நரம்பெல்லாம் மிக்சர் சாப்பிடுற வெறி இருக்கறவங்களால் மட்டுமே இப்படி எழுத முடியும்.. :)) ஆபீஸ் மீட்டிங்கிலும் எப்போ பிஸ்கட் கொடுப்பாங்க எப்ப டீ கொடுப்பாங்க என்ற டேட்டாபேஸ் தான் நிறைய வச்சிருப்பார் .ஒரு கூட்டமா எதைப் பத்தியும் கவலைப்படாம மொக்கை போடுற கூட்டம் இவங்களுது :) funny girl மாரி :)
சமீபத்தில் வெள்ளநேரத்தில் இங்க RT ஆகி வர்ற நம்பர்களை verify பண்ண , ஒரு ராங் காலிடம் வாங்கிக் கட்டியதை இவரும் இவரோடு வாங்கிக் கட்டிய பலரும் ஒவ்வொருவராக ஒன்றன் பின் ஒன்றாக ஆஜரானதில் இரவு 12 மணிக்கு வயிறு வலிச்சு சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டோம் ..மறுநாள் தடயத்தை பூரா அழிச்சுட்டாங்க ராஸ்கல்ஸ் :)) தாமோதர ஆசான் விஷயம் போலவே இதிலும் ராங் கால் நபரிடம் வாங்கிக் கட்டிய ஆண் கீச்சர்கள் கமுக்கமாக இருக்க , பெண்கள் தான் ஜாலியாக உடைத்து விட்டார்கள் :) பொண்ணுங்க எல்லாம் இதயதாமரை ஜனகராஜ் மாதிரி வாயில இருக்கிறது சிகரட் இல்ல பட்டாசு தான்னு யாராஆஆஆவது சொல்லிருக்கக் கூடாதா mode ல பேச ஆரம்பிக்க , ராங்  கால் நபரிடம் பேச ஆரம்பிச்சு,அவர்  முழுசா திட்டறவரை அமைதியா இருந்தேன்..கடைசியா தான் தோனுச்சு முதல்லயே போனை கட் பண்ணிருக்கலாம்னு என முத்தாய்ப்பாக முடிச்சு வச்சாங்க வேற ஒரு கீச்சர் :))

@Real_Kadavul  போடும் ட்வீட் எல்லாமே அதிரடி ரகம் ..கடவுளே காண்டாகி நேராகப் பேசுவது போன்ற பிரம்மை :) ஆனா fake id maintain பண்ண முடியல போல கடவுள் அடிக்கடி வாறதில்லை இப்ப :)

@JAnbazhagan  திமுகவுக்கு கிடைத்த முத்தான MLA . வெகு அழகாக இணையத்தைக் கையாள்கிறார்.. இனிமையான பேச்சு..நக்கல் பதிலுக்கும் பணிவான பதில். தேவையில்லாதவற்றை அழகாக ஒதுக்கி விடுதல்..MLA பெரிய ஆள் என்ற எண்ணம் இன்றி சகஜமாக பல சாமானியர்களையும்  இங்கே பின் தொடர்கிறார்..சென்னை வெள்ளத்தில் கரண்ட்,நெட்வொர்க் இல்லாமல் பாதிக்கப்பட்ட பொழுதும் , அடுத்தவரிடம் வண்டி வாங்கி தொகுதிக்குச் சென்று பார்த்து வந்து நிவாரணப் பணிகளும் செய்ததை கவனித்தேன். நான் வியக்கும் பண்பாளர் .

@ChittizeN   கேண்டிட் போட்டோகிராபர்..இவர் கை வண்ணத்தில் பல கீச்சர்களின் திருமண ஆல்பம் அழகுற்றது :)

@gurussiva அருமையான நகைச்சுவை எழுத்தாளர்..ஏனோ இப்ப அதிகம் வருவதில்லை

நம்ம அலைவரிசைக்கு தகுந்தாற்போல் ஆட்கள் வந்து சேர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.. அது போல வெகு யதார்த்தமாக வந்தவர்கள் இவர்கள்
@isai_  @NamVoice  @ak_nirmal @Paramporul @Pa_Siva  

இதில் இசையின் தமிழ் , வாசிக்கும் நாவினைச் சுழற்றி அடிக்கும் :) படிச்ச உடனே புரிஞ்சுட்டா பெரிய விஷயம் தான் .
@imdiganesan  @Rdeepakk  பகுத்தறிவு பேசும் பலரும் , பெண்களை மானாவாரியாக நக்கல் அடிக்கும்போது அங்கே பகுத்தறிவு அடிப்பட்டுப் போகிறது.  பெண்ணை மதிப்பதற்கும், கடலை போடுவதற்கும் வித்தியாசம் தெரியாத மானிடர்கள் பகுத்தறிவால் யாதொரு பயனும் இல்லை.இன்னும் சொல்லப் போனால் ,கயமை இந்துத்வாக்களுக்கு இது போன்றவர்களால் ஒட்டுமொத்த பகுத்தறிவாளர்களே இப்படித்தான் என பொதுமைப்படுத்த ஏது செய்கிறார்கள்.. இவர்கள் அவர்களில் இருந்து வேறுபட்டவர்கள் .

@thachimammu  கீச்சுக்கள் பெரிதாக ஈர்க்கும் எனச் சொல்ல மாட்டேன்..ஆனால் சத்தமில்லாமல் பல உதவிகள் செய்பவர்...இங்கே வரும் நெகடிவ் கீச்சுகளுக்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல் தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவர்..சமீபத்தில் வெள்ள நிவாரணப் பணிகள் கூட தாமதமாகவே வந்து அப்டேட் செய்தார். கமலுடனான அவரது சந்திப்பை ஒரு ரசிகனின் பார்வையில் சொன்னது மட்டும் மறக்கவே முடியாது :) தனக்குப் பிடிச்ச விசயங்களை மட்டுமே பேசியும் பகிர்ந்தும் விட்டு நகர்கின்ற சில டிவிட்டர்களில் ஒருவர்..ஒரு தனி கூட்டம் இருக்காங்க..இவர் ,சாய் சித்ரா இப்படி சிலர் சேர்ந்து ஒன்றாக ஒரு இடத்தில் கூடி அங்கே ராஜா பாடல்களை இசைமைத்துப் பாடி இன்புறுவர்..ஒரு நாளாவது அதை வேடிக்கை பார்க்கணும் என்று ஆசை :)

@Shaan_64   அனேகமா டிவிட்டரில் எல்லாருக்கும் இவங்களப் பிடிக்கும் என நினைக்கறேன்..ஏனெனில் இங்கே பெரும்பாலும் இவர் வேடிக்கையாளர்...ரசனையாளர்..சமீபமாக உரையாடல்களில் இவரது டைமிங் புகைப்படங்கள் கவர்ந்து இழுக்கின்றன ..அரசியல் சார்ந்த கருத்து கூட ஒரு பொதுசனத்தின் பார்வையில் தான் விழும்..


@AasifNiyaz  மிக தாமதமாகவே பின் தொடர்ந்தேன்..நல்ல சிந்தனையாளர்... தன் மதம் சார்ந்த நம்பிக்கை எனினும் பர்தா விசயத்தில் பெண்கள் விரும்பவில்லை எனில் வற்புறுத்துதல் கூடாது என நிதானமாகச் சொன்னவர்.... தமிழார்வலர் .இடைச்சங்கம் கடைச்சங்கம் பாடல்கள் பற்றி @kryes  உடன் இவரது உரையாடல்களை விரும்பிப் பார்ப்பேன்.. ஆவேசம் இராது..அறிந்து கொள்ளும்/பகிரும் ஆர்வம் மட்டுமே மேலோங்கி நிற்கும்..பல விசயங்களிலும் இதே நிதானம் தான் இவரிடம் :)

@Aanandraaj04  ஆனந்தராஜ் ஜெயின் என்றே அழைக்கும் அளவுக்கு சமணக்கருத்துகளை அள்ளித் தெளிப்பவர் :) தகவல்கள் ,அரசியல், அப்பப்ப கிரைண்டரில் மாவாட்டியும் சப்பாத்தி சுட்ட வாக்கிலும் வரும்..விவாதங்கள் பார்க்கப் பிடிக்கும்..ஆனா தப்பித் தவறி விவாத வண்டியில் ஏறிட்டா நான்ஸ்டாப்பா பல நாள் ஓடும்..(கதறிஅழறசுமைலி ) கேப்டன் சார் உங்க ட்ரைன் தான் அலர்ஜி மத்தபடி தகவல்கள் படிக்கப் பிடிக்கும் :) அதே நேரம் இவரோடு முரண்படும் விசயங்களும் உண்டு.  விவாதங்கள் விஷயங்கள் பகிரும் நோக்கிலோ அல்லது ஆரோக்கியமாக இல்லை என்றாலோ நான் பெரும்பாலும் தவிர்த்து விடுவேன்..இதனாலேயே சிலரை mute ,ப்ளாக் செய்ததுண்டு..ஆனா திரும்பத் திரும்பப் பேசியதையே பேசுபவர்களிடமும் , ரசிக சண்டையாளர்களிடமும் விடாக்கொண்டனாக இவர் பேசறப்ப வேடிக்கை பார்க்கிற நமக்குத்தான் களைப்பாகும்ன்னா பார்த்துக்கிடுங்க.. தெய்வ கேப்டன்(தெய்வ மச்சான் tone இல் வாசிக்கவும் )

@apssara2013  நான் அதிகம் ரசித்த குரல்..ஒலிமுகிலில் பல பாடல்கள் பதிவேற்றி வைத்திருக்கிறார்..எல்லாமே ரசிக்கலாம். முறையான பயிற்சியும் சரியான மேடையும் கிடைச்சா பெரிய பிரபலமாக வாய்ப்பு இருக்கு..ஆனா இங்க ஒவ்வொரு ட்விட்டர் கிட்டயா  மைக்கை நீட்டி கருத்து கேட்டு பொங்கிப் பொங்கல் வைக்கவே நேரம் சரியா இருக்கு..அப்ப மட்டும் அம்மா தாயே முடியலன்னு மனசு கிடந்து கதறும் :)) இவங்க பாட்டு கேட்கறதை விட்டுட்டு ட்வீட் மட்டும் பார்த்து கதறுனா கம்பெனி பொறுப்பேற்காது :))


@Gokula15sai  முழுக்க முழுக்க வேலைவாய்ப்புத்தகவல்கள் சார்ந்த RT .அவ்வப்போது அரசியல் ..நடிகர் சார்ந்த கீச்சு ,மொக்கை அறவே இராது..

@jebz4  @sheeba_v  டிவிட்டரின் இரட்டை வாலுகள்.. ஷீபா சில விசயங்களில் பக்குவம்.. ஜெபா தன் நட்புக்காக என ஆரம்பித்து அரசியல் வரை அத்தனையிலும் கம்பு சுற்றுவார்.  நான்லாம் இங்க இலகுவாகப் பேசுவதே குடும்பம், நெருங்கிய நட்பு இல்லன்னு தான்..ஆனா இவங்க குடும்பமா இங்க ஆக்டிவா இருக்கிறப்ப எப்பேர்ப்பட்ட புரிதல் அவங்களுக்குள்ள இருக்கக்கூடும் என வியந்ததுண்டு..பாசத்தைப் பிழிஞ்சு எடுக்காம ஒருவருக்கொருவர் கலாய்த்து கொள்வதும், ஆனால் உள்ளார்ந்து ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காத தன்மையும் என்னை அசர வைக்கும். மேலும் பின்தொடர்ந்தாலும் அவ்வளவு இலகுவாக நானும் நெருங்கவில்லை. இவர்களையும்  நெருங்கவிடவில்லை .ஒரு கூட்டமா மொக்கை போட்டு மண்டை காய வைப்பாங்க..மேலும் நமக்குப் பிடிக்காதவர்களிடம் நெருக்கம் காட்டறப்ப இவங்க மேல வெறுப்பு வராட்டியும் ஒரு ஒதுக்கம் இருக்கும்..ஆனால் அதையும் தாண்டி ஜெபா கொஞ்சம் கொஞ்சமா என் வேலியை உடைத்து உள்ளே வந்துவிட்டாள் :) ரொம்ப பெர்சனலா பகிர்வது இல்லை எனினும் , பெயரைப் பார்த்ததும் புன்னகை இயல்பாய் வருமளவுக்கு மனதின் ஓரம் இருக்கிறார்கள் :)

@eestweets  வரலாறு முக்கியம் அமைச்சரே எனும் ஹிஸ்டரி வாத்தியார்:) எல்லா செய்திகளுக்கும் ஒரு நதிமூலம் ரிஷிமூலம் இருக்கும் இவர்கிட்ட..அதனால பார்த்துப் பேசணும் :)

@Mayilrekka  பொதுவா ஆண்டு இறுதியில்  பின்தொடர்ந்தவர்களைப் பற்றி நான் எழுதுவதில்லை.  ஆனாலும் இவர் ட்வீட்ஸ் எல்லாமே பிடிச்சுப் போனதால எழுதறேன்..எப்படி மிஸ் பண்ணோம் இத்தனை நாள் எனத் தோன்றியது.   ஒவ்வொரு கவிதையிலும் ஓர் அழகான காதல் சிறுகதை .  சில நேரம் நம் கற்பனைகளுக்கு எழுத்து வடிவம் கொடுக்கத் தடுமாறுவோம் அதை எவரேனும் சொல்றப்ப அடடேன்னும் கொஞ்சம் பொறாமையும் நமக்கு முந்திக்கிட்டாங்களே என்று ஒரு குற்றச்சாட்டும் தோன்றும்..அது போலத் தோன்றியது இவரது சில கீச்சுக்கள்..:) இவரது அரேன்ஜ்டு மேரேஜ் பார்ட் 1பார்ட் 2 ரெண்டுமே வெகு ரசனையான நிச்சயிக்கப்பட்ட காதல் கதை :)

@Kurunthokai   குறுந்தொகைப் பாடல்களும் அதன் ஆங்கில விளக்கமும் .நல்ல முயற்சி.
@udanpirappe  இவருடைய முகநூல் பதிவுகளுக்கு நான் ரசிகை..இங்கயும் தான் sense of humor அள்ளும் .முதல் வரியில் உருகி ,ஆகா என்ன ஒரு காதல் என நாம நம்புறதுக்குள்ள அதுக்கு கவுன்ட்டர் கொடுத்து கலாய்த்து வச்சிருப்பார் மனுஷன்..என்னமோ இப்ப அந்த வகை கவுஜகளைக் காணோம்.. :)

@WhimsyDaisy   தங்க்லீஷ் ல எழுதி கண்ணு வலிக்க வைப்பாங்க..ஆனாலும் பின் தொடரக் காரணம் rare ஆக வரும் விசயமுள்ள விவாதங்கள்.  அவ்வப்போது வந்து போகும் கணவன் மனைவிக்கு இடையேயான நகைச்சுவை உரையாடல்கள் ,ஓர் அம்மாவாக எழுதும் arjundays மகனதிகாரம் .

@Lakschumi  பெண்ணியவாதி பிடிக்காத பெண் கீச்சர் :) எவரிடமும் ஒட்டாமல் மேலோட்டமாகப் பேசி விட்டே நகர்வார்..  ஏதோ மோசமான அனுபவம் போல..பல விசயங்களில் நாங்க நேரெதிர் ..ஆனாலும் விவாதம் தவிர்த்து மௌனம் காத்து,  இப்போ தள்ளி நின்று புன்னகைக்கும் அளவுக்கு ஆகியாச்சு..:) இவங்க வாழ்த்தினா அன்றைய நாள் இனிதாக இருக்கும் என்பது எனது சமீபத்திய நம்பிக்கை :)

@nivethee  மான் விழியாள்ன்னு போட்டிருக்காங்க .எனக்கென்னவோ அது முட்டைக் கண் மாதிரிதான் தெரியுது... :) இவங்களோட ஒரு ரசனையான கிண்டல் பார்த்து பின் தொடர்ந்தது..மாணவப் பத்திரிகையாளர்..(எனக்கு இது ஒரு காலத்தில் கனவு ..ஆனா முயற்சி எடுக்கல :)) ) குறைந்தபட்ச நேர்மை உண்டு.. ராஜா-நிருபர் சர்ச்சையில் வீணாக தம் கட்டல..அதே நேரம் விஜயகாந்த் த்தூ வுக்கு,  நான் விகடன் உட்பட பொதுவா மீடியாவுக்கு டிவிட்லான்கர் எழுதியப்ப விட்டுக் கொடுக்காம ,கோபப்படாம நிதானமா சில கருத்துக்கள் சொன்னாங்க .  எனக்கு அது சரியான பதிலாக தோனாவிடிலும் கோபம் வரல..ஏனோ இவங்களுக்காகவே ஆனா இவங்களிடம் சொல்லாமலே அந்த விகடன் கட்டுரைக்கு எழுதிய எதிர்வினையைநிறைய RT ஆன பிறகும்கூட அழித்துவிட்டேன்..ஒரு சின்ன வருத்தம் கூட இல்ல அதுல :) I just love her attitude.  சிலரை ஏன் பிடிக்கும்ன்னே தெரியாது..அதிகம் பேசாட்டி கூட ஏதோ ஓர் ஈர்ப்பு இருக்கும்..இவங்களைப் பத்தி இங்க எழுதி வச்சிருந்த அதே நேரத்தில், யதார்த்தமா தனக்குப் பிடித்த டிவிட்டர்கள் லிஸ்ட் ல என்னையும் சேர்த்து எழுதி இருந்தாங்க..அதுவே எனக்கு ஆச்சரியம்தான் :)

பலரைப் பத்தி முன்பே எழுதியாச்சு..பிடிக்காம என் TL ல யாரையும் நான் சகிப்பதில்லை..ஏதேனும் வருத்தம் வந்தால் கொஞ்ச நாள் mute அப்புறம் எடுத்து விட்டு சகஜமாகப் பேசுதல் நல்லாருக்கு..இந்த mute option தான் ஜாக் கொடுத்ததிலேயே பெஸ்ட் :)

எல்லாம் ஒரே நாளில் எழுதியது அல்ல..  அப்பப்ப தோன்றத draft ல போட்டு வச்சு எழுதறது..உட்கார்ந்து ஒரே மூச்சில் எழுதுவதில் சில விட்டுப் போகக் கூடும்..நேரம் கிடைக்காது..சில நேரம் கருத்துக்கள் மாறுபடும்...அதனால் தான் ரொம்ப ரொம்ப மெதுவா எழுதி இப்ப வெளியிடறேன்.. :)
***********************************
அடுத்தும் ஒன்று தொடரும் :))
***********************************