Saturday, February 25, 2012

பெரு மூச்சு ஒரு தொகுப்பு

 அதிகம் ரசிக்கப்பட்டவைகளின் ஒரு தொகுப்பு 

நீ புத்தகம் படிக்கின்ற பொழுதெல்லாம்
உன்னிரு கைகளுக்குள் புகுந்து
உன் உறுதியையும் 
படித்துவிட ஆசை எனக்கு
ம்ம்ம்ம் ..படி..dடா.. பார்க்கலாம் ;)
 ********************************************
சுக்கு நூறாகக் கிழித்த 
நினைவுகளை எல்லாம்
மொத்தமாக அள்ளினேன்
சிதறிப் போனது மனது 
******************************
நீயில்லாப் பொழுதுகள்
யாவும் நீள் பொழுதுகளாக..
************************************
பொய்யறிந்த கண்களின் 
கேலியில் உன்னிடம் 
மாட்டிக்கொண்ட மெய்யறிந்து
வெட்கித் தலைகவிழ்ந்தன 
என் இதழ்கள் பற்களுக்குள்...
**************************
முகம் நோக்கித் தூறும்
சாரல்கள் யாவும் 
என் செல்லக் கோபங்களை 
சமாதானம்செய்யத்
தீண்டும்
உன் விரல்கலாகின்றன
"ம்ம்ம்மாமழை"
***************
விலகி செல்லாதே அருகில் வந்தென்
இதழ் ஒற்றி(று) ப்பிழை திருத்து
******************************
எனை எவ்வளவு பிடிக்கும் என 
கைகள் விரித்து சொல்லாதே 
அவ்வளவு பேராசைக்காரி இல்லை நான் 
என் "மெய்"அளவு கை சுருக்கி 
"மெய்" சொல் அதுபோதும்
************************************
உன்னை எவ்வளவு பிடிக்கும் 
எனக் கேட்டால் தெரியாது
உன்னளவு மட்டுமே பிடிக்கும் 
உன்னைத் தவிர வேறு எதுவும் சிறந்ததில்லை 
உதாரணம் சொல்வதற்க்குக்  கூட...
************************************************* 
ஏதோ பண்டிகை என்கிறார்கள் 
திருவிழா என்கிறார்கள் 
நீ வருகின்ற வரையில்
எனக்கு இது மற்றும் ஒரு நாளே !
*********************************************
தேடாதே என் வெட்கங்களை
உன் கேலி சிரிப்புகள் விரட்டி சென்றதால் 
வெட்கப்பட்டு உன் முதுகின் பின்னால் 
ஒளிந்து கொண்டு நிற்கின்றன...
*****************************************
"அசடாகவே"
இருக்க ஆசைப்படுகிறேன்
என் தலை குட்டி 
மூக்கை ஆட்டி 
நீ சொல்கின்ற அழகிற்காகவே!
**********************************
ஒரு கையால்
இடைவளைத்து
மறுகையால் தாடை நிமிர்த்தி
"பேசு"எனக் கெ(கொ)ஞ்சுகிறாய் 
உன் அருகாமையில்
நான் பேச்சிழந்ததை அறியாமல் !
*********************************
தூக்கத்தில் ஆதரவிற்கு அலையும் 
குழந்தையின் கை போல 
பர பரவென எப்பொழுதும் 
உன்னையே தேடி அலையும் மனது
************************************************
பயந்தால்
அணைத்துக் கொள்வாய் 
என அறிந்தே
பயம் கொள்கிறேன் நான்! 
************************************
பெண்ணாக பிறந்தது
பிழையென கருதுகிறேன்
பெண்மை மீறி
மழையென என்
காதலை
பொழிவதற்கு இயலாத போது ...!
******************************
 
 
 
 
 
 

 
 
 

No comments: