Friday, February 24, 2012

ட்விட்டர் அப்டேட்ஸ்..!3

 காயில் இனிது லிக்விட் இனிது என்பர் பேட்டால் அடித்து  கொசு கருகும் இனிமைச் சத்தம் கேளாதவர்

இயலாமையால் தீர்த்துக் கொள்ள முடியாத பழிகள் பெரும்பாலும் கடவுள் பார்த்துக் கொள்ளட்டும் என்று ஆற்றாமையில் விடப் படுகின்றன

தைரியமின்றி தற்கொலை செய்பவர்கள் புனித ஆத்மாவாகவும் எதிர்த்து போரிட்டு வேறு வாழ்க்கை தேடிக் கொண்டால் புறம்போக்காகவும் ஆக்கப்படறாங்க#நடிகை

அப்பாடக்கர் என்பதற்குச் சரியான தமிழ் வார்த்தை "தில்லாலங்கடி" உபயம் கவுண்டமணி #வெட்டியா இருக்கும் பொழுது யோசிச்சேன்:)

தானே மாமியார் ஆனாலும் தன் மாமியாரைக் குறை சொல்றதை விட மாட்டாங்க போல சில பெண்கள் :)


உதவி செய்தாலும் மிதிக்கவே படுகின்றன ஏணிகள்

சிலர் விலகிச் சென்றபின்தான் சுதந்திரமாகச் சுவாசித்தலின் சுகம் தெரிகின்றது

பாட்டு டெடிகேட் பண்றோம் தங்கபாலுவுக்கு #போ னால் போகட்டும் போடா இந்த காங்கிரசில் நிலையாய் நிலைத்தவர் யாரடா
பணம் உதவி செய்தால் மட்டுமே அது உதவியாகக் கணக்கில் கொள்ளப்படுகின்றது பலருக்கு#மத்த உதவியை மனசுல வச்சுக்க மாட்டேங்கறாங்கப்பா:(
நம் இடைவெளிகளை நிரப்பிக்கொண்டிருக்கின்றன மௌனங்களும் உன் நினைவுகளும்


2016 -இல் நாம் தான் ஆட்சியில் என்று உடன்பிறப்புகள் வாக்கை மெய்யாக்க அம்மாவே போதும் போல :P 
சோகத்தை வெளியே "காட்டிக்"கொண்டே இருந்தால் மட்டுமே சோகமாய் இருப்பதாக நம்பப்படுகின்றது
என்னதான் சரியா பார்த்து ஓட்டினாலும் எதிர்த்து வருபவனிடம் இருக்கு நம்ம உசிரு #ட்ரங்கன் மங்கி ஸ்டைல் ல ஓட்டரானுங்க
கண்ணா உனைத் தேடுகிறேன் வா என்றதும் வயலின் வெளிப்படுத்தும் உணர்வுகள் அபாரமானது கொஞ்சிக் குழைந்து அழைப்பை ஏற்கின்றது
மேஜர் சுந்தர் ராஜன் ஸ்டைல்ல தான் குழந்தைங்களுக்கு தமிழ் சொல்லித் தரவேண்டியதா இருக்கு# இது வாழைப்பழம் "பனானா"
இந்தக் குழந்தையின் அம்மா என்று அறியப்படுவதில் ஒரு கர்வம் இருக்கு அம்மாக்களுக்கு#அர்ஜூனம்மா துர்காம்மா

தற்பொழுது விமர்சனம் செய்பவர்களிடம் முந்திக் கொண்டு சொல்லணும் என்ற அவசரத்தனம் மட்டுமே தெரியுது#முழுசா கவனிக்கிறதே இல்லை
மக்களோட சோம்பேறித்தனங்களை காசாக்கி பார்ப்பதுதான் தொழில்நுட்பம் :)


உனக்கான சமையலில் நான் அதிகம் இடுவது உப்பு #உள்ளவரை நினைப்பாய் ஆதலால் #கடுப்பு :)
பட்டப் பகலில் எவன்டா லைட்டை போட்டு கரெண்ட்டை வேஸ்ட் பண்றது ராஸ்கல்ஸ் -குடிமகன் நடுரோட்டில் சூரியனைப் பார்த்து#வேடிக்கை:)
சத்தமா பேசிகிட்டு இருந்தவங்க திடீர்ன்னு சன்னம்மா பேசினா வேற யாரை பத்தியோ புறணி பேச ஆரம்பிச்சிட்டாங்கன்னு அர்த்தம் :)
என்னதான் பார்த்துப்பார்த்து ட்ரெஸ் எடுத்தாலும் அது என்னவோ அடுத்தவங்க கையில இருக்கிற ட்ரெஸ் தான் ரொம்ப அழகாத் தெரியுது:) 
ஓசில வண்டி வாங்கிட்டுப் போனா திரும்பத் தரும் போது பெட்ரோல் போட்டுக் கொடுங்கப்பா#திடீர்னு உருட்ட வேண்டியதா இருக்கு 
வாழ்வின் எல்லா தருணங்களிலும் உடனே இருக்கும் உற்ற தோழன் இளையராஜா  

பாட்டு டெடிகேட் பண்றோம் தங்கபாலுவுக்கு "ஆகாயச் சூரியனை ஒற்றைத் தலையில் கட்டியவர் " :))))
பாட்டு டெடிகேட் பண்றோம் கி.வீரமணிக்கு "சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக் கிளி சொல்லி சொல்லிப்பாடும் இந்தக் கிளி" :P

No comments: