Thursday, December 1, 2011

அம்மா!

அம்மா சமையலைச் சிலாகிக்கும் பாக்கியம் நமக்கு மட்டும்தான் அடுத்த தலைமுறை வீட்டில் வேலைபார்ப்பவர்களைப் பற்றிச் சொல்லக் கூடும் ..
***************************************************************************
உருக்கமா ஒரு பொய் சொல்லிவிட்டால் உடனே நம்பிவிட அம்மாவால்
மட்டுமே முடியும்
******************
பிள்ளைகளிடம் விரும்பி ஏமாறுபவர்கள் ஏமாறுவதை விரும்புபவர்கள் 
அம்மா 
*******
நலமில்லை என பொய்
சொன்னாலேபார்க்காமல்  நம்பிவிடும் அம்மா
நலமாகிவிட்டது என எத்தனை முறை
சொன்னாலும் கண்களால்
அளவெடுத்துக்கொண்டே இருக்கின்றாள்..

***********************************************
  நாலு தடவை சொல்லி விட்டு ஐந்தாவது தடவை மனசில்லாமல் தானே
அந்த வேலையைச் செய்துவிடுவது அம்மாவாகத் தானிருக்க முடியும்
*************************************************************************
சிறு வயதில் அம்மா சீயக்காய் தேய்த்துப் பராமரித்தவரை
கேசம் நன்றாகத் தானிருந்தது #கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் 
**********************************************************************
தலையில் துண்டு கட்டிக் கொண்டு வேலையில் தீவிரம் காட்டும்
வெள்ளிக் கிழமை தேவதைகள் #அம்மா 
*****************************************
அப்பாவின் சுடு சொற்களை விடப்
பெரிதாக அம்மாவின் அடிகள் பாதிப்பதே இல்லை 
***************************************************
சாப்பிடப் பிடிக்காததை உடனே எடுத்துப் போட
அம்மாவின் தட்டு எப்பொழுதும் அருகில் தேவைப்படுகின்றது 
வேண்டாமென ஒதுக்கிய பின்பே தான் உண்ணும் அம்மா 
***********************************************************
அம்மா உணவை ஊட்டுவிட்ட காலங்களில் உணவின் சுவை
இன்னமும் அதிகமாக இருந்தது #ஏக்கம் 
*****************************************
எளிமையாகச் சாப்பிடுவது நல்லது 
அம்மா ஊரில் இல்லாத தருணங்களில் மட்டும்  
ரொம்ப நேரம் யார் சமைக்கிறது :)))
*********************************
பெரும்பாலும் அம்மாவே பெண் குழந்தைகளை புகுந்த வீட்டில் 
எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று மனதளவில் தயார்
செய்து விடுகின்றார்கள் 
*************************


 










No comments: