எனது கற்பனைக்காதலனுக்கு சமர்ப்பணம்
நீயில்லாப் பொழுதுகள்
யாவும் நீள் பொழுதுகளாக..
*******************************
யாதுமாகி நீ நின்றாய்
வேறு யாதொன்றும்
இல்லாமற் போனது ..
****************************
விலகி (__ ) செல்லாமல்
அருகில் வந்து இதழ்
ஒற்றி(று)ப் பிழை திருத்து..
************************************
விலகி (__ ) செல்லாமல்
அருகில் வந்து இதழ்
ஒற்றி(று)ப் பிழை திருத்து..
************************************
நான் சிரிக்கப்
பொறுக்காதவன் நீ
சட்டென்று என் இதழ் மூடி ... ;)
********************************************************
உன்னால் மட்டுமே உதிர்ந்து விழும்
மணல் கோட்டைக்கு
"திமிர்"எனப் பெயரிட்டு இருக்கின்றேன்..
******************************************************
சுக்கு நூறாகக் கிழித்த
நினைவுகளை எல்லாம்
மொத்தமாக அள்ளினேன்
சிதறிப் போனது மனது
*******************************
உன் சுளித்த புருவங்களுக்கிடையே
சிக்கித் தவிக்கிறேன்
சீராக்கி நீ சிரிக்கின்ற வரையில்...
******************************************
நம் இடைவெளிகளை
நிரப்பிக் கொண்டிருக்கின்றன
மௌனங்களும் உன் நினைவுகளும்
*************************************************
வெட்ட வெட்ட வளர்கின்றது
-வலி
*******
உன் தவறுகளை மன்னிக்கும் பொழுது
தாயாகின்றேன்
சண்டையிடும் பொழுதெல்லாம்
அடித்தாலும் நின் அணைப்பையே
எதிர்பார்க்கும் சேயாகின்றேன்
*****************************************
என்ன தவறு செய்தது பூமி
இப்படி ஓங்கிக் கொட்டுகிறது
வானம்
மழைக் கரம் நீட்டி
"மாமழை"
*************
வெட்ட வெட்ட வளர்கின்றது
-வலி
*******
உச்சி முகர்ந்து நெற்றியில்
கொடுக்கும் நின்
முத்தங்கள் யாவும் நீ
எனக்களிக்கும் ஆசீர்வாதங்களாகின்றன
********************************************************உன் தவறுகளை மன்னிக்கும் பொழுது
தாயாகின்றேன்
சண்டையிடும் பொழுதெல்லாம்
அடித்தாலும் நின் அணைப்பையே
எதிர்பார்க்கும் சேயாகின்றேன்
*****************************************
என்ன தவறு செய்தது பூமி
இப்படி ஓங்கிக் கொட்டுகிறது
வானம்
மழைக் கரம் நீட்டி
"மாமழை"
*************
5 comments:
கடுகு ஆனாலும் இனிமை ,காரம் குறையவில்லை
நன்றி தொடர் ஆதரவிற்கு :)
அருமை...
தொடர்ந்து எழுதுங்கள்.
விரைவில் ஒரு கவிதை தொகுப்பை உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன்.
வாழ்த்துகளுடன்.
-ஜெயம்.
அருமை...
தொடர்ந்து எழுதுங்கள்.
விரைவில் ஒரு கவிதை தொகுப்பை உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன்.
வாழ்த்துகளுடன்.
-ஜெயம்.
மிக்க நன்றி!ஊக்கத்திற்கு :)
Post a Comment