Tuesday, October 18, 2011

பெருமூச்சு ...5!

எனது கற்பனைக்காதலனுக்கு சமர்ப்பணம் 

நீயில்லாப் பொழுதுகள்
யாவும் நீள் பொழுதுகளாக..
*******************************
யாதுமாகி நீ நின்றாய்
வேறு யாதொன்றும் 
இல்லாமற் போனது ..
****************************  
விலகி (__ ) செல்லாமல் 
அருகில் வந்து இதழ் 
ஒற்றி(று)ப் பிழை திருத்து..
************************************ 
நான் சிரிக்கப் 
பொறுக்காதவன் நீ 
சட்டென்று என் இதழ் மூடி ... ;)
********************************************************
உன்னால் மட்டுமே உதிர்ந்து விழும்
மணல் கோட்டைக்கு 
"திமிர்"எனப் பெயரிட்டு இருக்கின்றேன்..
******************************************************
சுக்கு நூறாகக் கிழித்த 
நினைவுகளை எல்லாம்
மொத்தமாக அள்ளினேன்
சிதறிப் போனது மனது 
*******************************  
உன் சுளித்த புருவங்களுக்கிடையே
சிக்கித் தவிக்கிறேன் 
சீராக்கி நீ சிரிக்கின்ற வரையில்...
******************************************  
நம் இடைவெளிகளை 
நிரப்பிக் கொண்டிருக்கின்றன
மௌனங்களும் உன் நினைவுகளும்
*************************************************
வெட்ட வெட்ட வளர்கின்றது
-வலி
*******
உச்சி முகர்ந்து நெற்றியில் 
கொடுக்கும் நின்
முத்தங்கள் யாவும் நீ
எனக்களிக்கும் ஆசீர்வாதங்களாகின்றன
********************************************************
உன் தவறுகளை மன்னிக்கும் பொழுது
தாயாகின்றேன்
சண்டையிடும் பொழுதெல்லாம் 
அடித்தாலும் நின் அணைப்பையே
எதிர்பார்க்கும் சேயாகின்றேன் 
*****************************************
என்ன தவறு செய்தது பூமி
இப்படி ஓங்கிக் கொட்டுகிறது
வானம் 
மழைக் கரம் நீட்டி 
"மாமழை"
*************

5 comments:

சி.பி.செந்தில்குமார் said...

கடுகு ஆனாலும் இனிமை ,காரம் குறையவில்லை

உமா கிருஷ்ணமூர்த்தி said...

நன்றி தொடர் ஆதரவிற்கு :)

Ramajayam Jayavelu said...

அருமை...
தொடர்ந்து எழுதுங்கள்.
விரைவில் ஒரு கவிதை தொகுப்பை உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன்.

வாழ்த்துகளுடன்.
-ஜெயம்.

Ramajayam Jayavelu said...

அருமை...
தொடர்ந்து எழுதுங்கள்.
விரைவில் ஒரு கவிதை தொகுப்பை உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன்.

வாழ்த்துகளுடன்.
-ஜெயம்.

உமா கிருஷ்ணமூர்த்தி said...

மிக்க நன்றி!ஊக்கத்திற்கு :)