Saturday, July 23, 2011

அது ஒரு கனாக்காலம்...!

1 .டிவி சரியா தெரியாட்டி விதம் விதமா ஆண்டெனாவை திருப்பி வச்சு மேல ஒருவர் கீழ ஒருவர் சத்தமிட்டு சரி செய்த காலம் 
2 .கிரிக்கெட் விளையாடி பந்து தலையில் பட்டு வீங்கியதை தேய்த்துக் கொண்டே அம்மாவிடம் சொல்லி விடாதே என்ற அண்ணனின் கெஞ்சல்

3 . வெள்ளிக்கிழமைகளில் வெளியூரிலிருந்து திரும்பி வர நேர்கையில் ஒலியும் ஒளியும் சத்தம் கேட்டு வீட்டிற்கு விரைவாக அண்ணன் இழுத்து சென்றதுண்டு

4 . வீட்டிற்கு முதன் முதலாக போன் வந்தபொழுது ஒவ்வொரு அழைப்பிற்கும் ஓடி போய் பேசியதுண்டு 
5 .தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் அம்மாவின் அடிக்கு பயந்து பரண் மேல் இருந்த அண்டாவில் அண்ணன் அமர்ந்திருந்ததை அண்ணாந்து பார்த்து விழித்த காலம் 
6 .நேராக நடந்து சென்றால் தொலைவில் தெரியும் வானத்தை தொட்டு விடலாம் என்றெண்ணியது ஒரு காலம் 
7 .அண்ணன் பள்ளி செல்லாததை அப்பா மாடி படியில் ஏறி வீட்டில் நுழையும் முன்பே "அண்ணா இன்னைக்கு ஸ்கூலுக்கு போகல "என்று போட்டுகொடுத்ததும் அப்பா அவனைக் கொல்லு கொல்லு படிக்காதவனை என்று திட்டியதும்

2 comments: