Sunday, January 6, 2013

ட்விட்டர் -ஒரு FLASH BACK :)

என் முந்தைய ஐந்து பதிவுகளும் எந்த அளவுக்கு பிறரை சென்று சேர்ந்திருக்கிறது  என்பதை தினம் overview மற்றும் view count மூலம் பார்த்து ஆச்சர்யம்:)
மிக மோசமான சூழல்களில் எல்லாம் ட்விட்டர் ஒரு மிகச் சிறந்த மாற்றாக இருந்தது என்றால் அது மிகையில்லை.பல வித அனுபவங்களைத் தந்திருக்கிறது ட்விட்டர்.நான் இங்கே சந்தித்த ஒவ்வொரு மனிதர்களும் பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் கொடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள் .

ஆள் ஆளுக்கு இரண்டு தினங்களுக்கு முன் பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக பொங்கிக் கொண்டிருந்தார்கள்.அது பற்றி அவசியம் வேறு ஒரு பதிவில் பார்ப்போம்.:) அட அட அட..எவ்வளவு அக்கறை :) 

பிடிக்காதவர்கள் ,பிடிக்காத விசயங்களைத் தவிர்க்க வேண்டும் என்று முடிந்தவரை இந்த பதிவுகள் அனைத்திலும் கவனம் கொண்டே எழுதினேன். இது அழகிய நினைவுகளின் தொகுப்பாக மட்டுமே இருக்க வேண்டும் என எடுத்த முடிவில் ஓரளவு வெற்றி என்றே நினைக்கிறேன்.அதனால் தான் இங்கே பிடித்தவர்களிடம் பிடித்த விசயங்களை மட்டுமே பகிர்ந்தது.
பல மாதங்களாக எழுதியது font size ,கலர் ஒரு சில இடங்களில் தொடர்பற்றும் இருந்திருக்கும்.அந்தக் குறைகளை பொறுத்தருளியதற்கும் நன்றி :)இந்தப் பதிவும் கூட பல நாட்களாய் எழுதியதுதான் :)

முடிந்தவரை முக்கியமான எதுவும் விட்டுப்போகக்கூடாது என யோசித்து யோசித்து எழுதியதில் பதிவு நீஈஈளம் ஆகிவிட்டது அதற்கும் பொறுத்தருள்க:)

வேறு ஒரு சிலரை வேண்டுமென்றே தவிர்த்து இருக்கிறேன்.இப்பொழுது பாராட்டினால் போலியாக தோன்றும்.
 
அதே சமயம் பலருக்கு விரிவாக எழுதலாம் என நினைத்து நேரம் இல்லாமலும் போய்விட்டது. வான்முகில்  ,  கடைக்குட்டி இப்பொழுதெல்லாம் வருவதே இல்லை.@bassiva  , @yasavi  போன்றோரும் ஆரம்ப காலத்தில் இருந்து ஈர்த்தவர்கள் தாம்.


எங்கே டியாக்டிவேட் செய்துவிட்டேனோ என்று பதட்டமாய்த் தேடி ஆச்சர்யம் கொடுத்த  itsbritto ,  எதிர்பாராவிதமாய் பிரியமும் அன்பும் எதிர்பாராத இடத்திலிருந்து வந்தால் அது மதிப்பிற்குரியதே அது இவர்களிடம் இருந்து @senthazalravi @valaivaasi @Sharan_kay 

செய்திக்கு கமெண்ட் போடுறவங்க மத்தியில் கமென்ட்க்கே கமெண்ட் போடும் சிட்னிகாரரின் இனிய தோழி @aayilyan இவங்க ரெண்டு பேரும் டி போட்டு பேச ஆரம்பிச்சுட்டா டைம் லைனே கலகல :) விளையாட்டா 66 A இருக்குன்னு சொல்ல ரெண்டு பேரும் நாலு நாளைக்கு என் @mention பக்கம் எட்டிக் கூடப் பார்க்கல.இவங்க மட்டும்  எப்படித்தான் பொய்யைக் கூட நம்புறாங்களோ?:)))))))

 @erode_kathir   @raajaacs ஒரு மெல்லிய நீரோடை போல இவர்கள்  ட்வீட்ஸ் யாவும்  

எந்த கூட்டமும் சேர்த்துக் கொள்ளாமல் எப்பொழுதும் தனி ஆவர்த்தனம் செய்கின்ற குணத்திற்காகவே  @ThePayon ஐப் பிடிக்கிறது .இப்பொழுதெல்லாம் பேயோன் பக்கங்கள் சுவராசியப்படுகின்றன.(புரிய ஆரம்பித்துவிட்டதால் இனி நானும் ரவுடி :D )

எப்போ TL ல உள்ளே நுழைஞ்சாலும் ஒரு நாலு பேரு எதைப் பத்தியும் கவலைப் படாம ஜாலி கேலி அரட்டை @magizhchi (@anu_twits ) @RazKoLu  @SettuSays  @PKSGR  தள்ளி நின்று வெகுவாக ரசிக்கிறேன் முடிந்தவரை வேறு எவரையும் காயப்படுத்தாமல் தங்களுக்குள் கலாய்த்தல்  இவர்கள் அலும்பு.பொறாமையாய் இருக்கிறது .எந்நேரமும் எவரையேனும் சீண்டிக் கொண்டே இருப்பவர்களுக்கு  இவர்கள் எவ்வளவோ தேவலாம்.

தனது நகைச்சுவைத் திறனாலும் சுளீர் கருத்துகளாலும் தனியே தெரிவது @altaappu ரஜினி பிறந்தநாளன்று இவர் ட்வீட்ஸ் யாவும் ரசித்தேன் :) @Razkolu (முழுக்க சென்னை ஸ்லாங் தான்) பட்டு பட்டுன்னு சொல்லிடறார் யாரா இருந்தாலும் எதுவா இருந்தாலும் :)


விடுபட்டுப் போனது @ayyanar இவரது பதிவுகள் அனைத்தும் அருமையாக இருக்கும் சிறுகதைகள் நிஜம் போல எழுதும் வல்லமை கொண்டவர் 

@Alexxious கலக்கல் ட்வீட்ஸ் க்கு சொந்தக் காரர் :)



@Tparavai  @RagavanG @Vrsaran @rasanai  வகுப்புத் தோழர்களோடு உரையாடுவது போன்ற உணர்வு .ஒத்த ரசனைகள் உள்ளவர்களிடம் பேசிப் பகிர்வது அலாதியான இன்பம்.தெரியாமல் #365RajaQuiz க்கு எக்ஸ்ட்ரா க்ளூ கொடுத்து உதவுவாங்க.பரீட்சையில் தெரியாம காப்பி அடிக்கிற மாதிரி ஒரு உணர்வு :))


@Rexarul  மாஸ்டர் அவரே அறியாமல் எனக்கு எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறார் :) ட்விட்லாங்கருக்குப் பிறகு தினம் தினம் பெரிய பிடுங்கல் இணையம் வருவதையே வெறுக்கும் அளவுக்கு.ஆனால் கடுப்பேற்றுபவர்களைக் கடுப்பேற்ற எளிய வழி கடுப்பாகாதது போல இருப்பதுதான் என்று படிச்சிருக்கேன்.உண்மையில் அதைத் தான் செய்தேன்.எனக்கு அந்த நேரத்தில் ஆகச் சிறந்த மாற்றாக இருந்தது.அதிலும் அவர் பாடல்களை ரசித்து அறிமுகப் படுத்தும் விதம் பிடித்துப்போக இப்போ தினம் அந்தப்பக்கம் போகாம இருக்கிறதில்லை.தினம் வகுப்புக்கு வராத மாணவியைக் கண்டிப்பது போல இருந்தது எங்கே ஆளைக் காணோம் என அவர் கேட்டது:)இனி ரெகுலர் ஆஜர் மாஸ்டர்:)) ராஜாவை பிடிக்க வெகு ஆழமான காரணங்களை நல்ல பாடல்களை அறிமுகப் படுத்துவதில் காட்டும் வல்லவர்கள் இவரும்  @Raaga_suresh -உம்





அரட்டையிடம் அரசியல் கமெண்ட்கள்  தான் பிடிக்கும் :)

என்னுடைய முதல் follower @karaiyaan டிவிட்டர்ல எல்லாம் சொல்லிக் கொடுத்து புரிய வச்சது அவர்தான் btw ட்விட்லாங்கர் கூட எப்படி போடறதுன்னு சொல்லிக் கொடுத்ததும் அவரேதான் :))))

பெண்கள் என்றால் நன்றாக எழுத மாட்டார்கள் என எந்த பொதுப் புத்திக்குள்ளும் சிக்காதவர்கள் இவர்கள் @powshya  @vettipulla

nithu_ji யின் மறு பிம்பமாக sricalifornia வைப் பார்க்கிறேன்.சுரீர் கருத்துகள் 

யார் ஆதிக்கம் பண்ணாலும் தட்டி கேட்பாங்க நம்ம Sowmi_:)

 காமம் அருவெறுக்கத் தக்கதல்ல வெளிப்படுத்துகின்ற விதத்தில் தான் விருப்பும் வெறுப்பும்.ஒரு பெண்ணின் பார்வையில் காதலும் காமமும் எவ்வளவு அழகாக சொல்ல முடியும் என உணர்த்தியவர் @JanuShath  ஒரே  ஒருமுறை போனில் பேசி இருக்கிறேன் இவரது ஈழத் தமிழ் புரிந்து பதில் சொல்வதற்குள் தாவு தீர்ந்துவிட்டது இருப்பினும் அழகு :)

ஒவ்வொரு பெண்களும் பிடித்தமானவர்களே ஆனாலும் மனதிற்கு மிக நெருக்கமாக வாழ்வு முழுவதிற்கும் தொடர வேண்டும் என நான் நினைக்கின்ற அளவுக்கு இந்த தோழிகள் அனைவரும் 
@nila_here நகைச்சுவை உணர்வாலேயே கவர்ந்தவர் :) கலாய்ப்பதில் கெட்டி :))

@nilakaalam உருவம் தவிர மற்ற அனைத்திலும் என்னைப் போலவே ரசனைகள் உட்பட .என் எண்ணங்கள் ரசனைகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாய்ச் சேர்ந்து உருவமானது :)

@kunthavai13 எந்த ஒரு மோசமான தருணத்திலும் விட்டுக் கொடுக்காத தோழி.
சோர்விலும் ஊக்குவிக்கும் பாங்கு. சக ரமணிச்சந்திரன் ரசிகை :)


@amas32 .வயது மட்டுமே வித்தியாசம் மற்ற எல்லாவற்றிலும் வெகு இலகுவாக என்னால் மனம் விட்டுப் பேசவோ சிரிக்கவோ இயலும்..ஒருவராய் இல்லாமல் ஒட்டுமொத்த குடும்பமும் நட்பாய்க் கிடைத்தது பேறு .(வீட்டிற்கு வருபவர்களை இப்படி எல்லாம் நன்கு உபசரிக்கக் கூடாது அப்புறம் அடிக்கடி வருவோம் :) )என் வீட்டு பூஜை அறையில் கூட அந்நியர்கள் நுழைய முடியாது.இவங்க வீட்டுல எல்லா அறைகளையும் அலசி ஆராய்ந்து  ஆட்டமும் அரட்டையும் அடித்தது மறக்கமுடியாத நினைவு:) சில மணி நேரம் போனதே தெரியவில்லை:) நிறைய நான்தான் பேசினேன் நினைக்கறேன் :P பெயருக்கு வாழ்த்தோ பாராட்டோ அன்றி அதை முழுமையாய்  ரசித்ததைக் குறிப்பிட்டு சொல்லி ஆத்மார்த்தமாய் வாழ்த்தும் பாங்கு  பெயர் எல்லாம் தேவையில்லை டிவிட்டர்களுக்கு அட்டகாஷ் அம்மா :)

@kuruvu  ஆர்குட்டில் ஆரம்பித்த நட்பு இன்று வெகு இறுக்கமாகிவிட்ட பிணைப்பு .பட்டப் பெயர் வைத்து அழைப்பதே என் வாடிக்கை:) நான் அழைத்த ஒரே காரணத்திற்காக மட்டும் ட்விட்டர் வந்தவர்.தமிழ் தாய்மொழியும் கிடையாது.அதில் படித்ததும் இல்லை.இருப்பினும் ஆர்வமும் மதுரையில் இருந்த காலத்திலும் கற்றுக் கொண்டவர்.நம்மை விட அட்சர சுத்தமாக ழ ல ள உச்சரிப்புகள் :) எனக்கு பல நேரங்களில் வழிகாட்டி.இசை பற்றிய அறிவும் நல்ல குரல் வளமும் உண்டு.ராஜாவின் ரசிகையாகி நல்ல பாடல்களைத் தேடித் தேடிக் கேட்டுக் கொண்டிருக்கிறார்:) எதையும் முகத்திற்கு நேராக சொல்லிவிடும் குணம்.குதிரையும் புத்தரும் வெகுப் ப்ரியம் ஜான் சேனாவின்
ரசிகை :) நுனிநாக்கு ஆங்கிலம் ,நுனிவிரலில் பல விடயங்கள் என அனைத்தும் தெரிந்து வைத்திருந்தாலும் எதையும் "காட்டி"கொள்கின்ற பழக்கமில்லை .தமிழை தானே எழுதக் கற்றுக் கொண்டு எழுதுகின்ற வேகம் இல்லாவிடிலும் எழுத்துப் பிழைகள் இருப்பினும் முடிந்தவரை தமிழில் எழுத இவர் செய்யும் முயற்சிக்கு எப்பவும் ஒரு வந்தனம்.நம் மொழியை நம் இசையை நம்மவர்களை விட அதைப் பிற மொழி பேசுபவர்கள் கொண்டாடும் பொழுது தனி ஆனந்தம்தான்.கவிதைகளின் காதலி
மிக மோசமான தருணங்களில் எல்லாம் உடன் இருந்த நட்பு.ஒரே வாக்கியத்தில் சொல்லவேண்டும் என்றால் என் ஆகச் சிறந்த தோழி :)
மர நிழலில் 
கற்பனை வெளிகளில் 
எனதாயுள் 
தன்னிலை மறந்த நிலை  
காற்று வருடும் 
கேள்விகள் அடங்கிய  
ஈரக் காற்றை 
ஏதோ தங்கள் குறைகளை
பூஜை அலமாரியின்
ஒற்றைத் துவாரம்
திருட்டு பய


நான் பின் தொடர்ந்த முதல் பெண் ட்விட்டர் @smileygirlch

நான் ட்விட்டர் வந்த புதிதில் வலை பாயுதே  வாழ்த்து ரெகுலரா சொன்னது நம்ம சௌமி :)

 சமீபத்தில் நான் பின்தொடர்ந்தவர்களில் என்னைக் கவர்ந்தவர்கள் @I_am_sme
@CadetKannan 


டிவிட்டரின் முதல் கணக்கெடுப்பு ட்வீட் (எனக்குத் தெரிந்து )
இதுதான் 


 அதிகம் RT செய்யப்பட்ட ட்வீட்  இதுதான் 
ட்வீட் காப்பி என ஒருவர் ஆபாசமாய்ப் பேசி நிறுவ முயற்சித்த பொழுது ஒட்டுமொத்த டிவிட்டர்களும் துளிகூட முரண்பாடின்றி அந்த நபரைக் கண்டித்தது எனக்கு மறக்கமுடியாத நெகிழ்வு.அத்தோடு டிவிட்டருக்கு முடிவு கட்ட நினைத்த என்னை வரவழைத்ததும் அப்போதிருந்த நண்பர்களின் அன்புதான் :) 

 எனது தோழியின் இதய அறுவைச் சிகிச்சைக்கு இரத்தம் தேவை என நான் அறிவிப்பு கொடுத்த மாத்திரத்தில் இவர் சென்று கொடுத்துவிட்டு வந்தது ஒரு மறக்கமுடியாத நெகிழ்வு :) 
 
அதிகமாய் ட்விட்டரில் வறுபட்டவர் தங்கபாலுவும்
 மன்மோகனும் தான் :) தங்கபாலு தலைமையில் இருந்து நீங்கியதற்கு அதிகம் வருத்தப்பட்டது நம் டிவிட்டர்கள்தான்.ரொம்ப நாளு பொழுதே போகாம தவிச்சாங்க:) இன்று தங்கபாலுவின் இடத்தை கேப்டன் பூர்த்தி செய்து கொண்டிருக்கிறார் என்றால் அது மிகையாகாது :) 

எத்தனையோ சண்டைகள் கருத்து மோதல்கள் நிகழ்ந்து இருந்திருந்தாலும் பேரறிவாளன் விசயத்தில் தான் ட்விட்டர் மிக மோசமான சூழலை எட்டியது.


நான் பின்தொடர்வதில் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது 1.நகைச்சுவை உணர்வு .2.இசை பற்றி சுவராசியமான பேச்சும் புதிய தகவல்களும் 3.கவிதை நான் பின்தொடர்பவர்களைத் தவிர வேறு எவருக்கும் இந்தத் திறன் இல்லை என அர்த்தம் இல்லை.நான் தொடர்வதில் அதிகம் இவர்கள் என்றே பொருள்:)




ஒரு பெண்ணை மனம் விட்டு சிரிக்க வைச்சு பாருங்க ஆயுசுக்கும் அவங்க மனசுல இருந்து அகலவே முடியாது .அப்படி என்னைச் சிரிக்க வைத்ததற்காக மட்டுமே ஒருவரைச் சிறப்பாக குறிப்பிட்டே ஆக வேண்டியுள்ளது.
 ஆம் நிச்சயமாக அது kolaaru தான்.கண்களில் கண்ணீர் வரச் சிரித்ததுண்டு.எத்தனையோ பேர் இங்கே சிரிக்க வைக்கிறார்கள் மறுப்பதற்கில்லை.ஆனால் இவருக்கு இணையாக என்று எவரையும் சுட்ட முடியவில்லை.தாத்தா எப்படி one man army யோ அதே போல இவரது நகைச்சுவைத் திறனும்.VERY TIMING .கொஞ்சம் நேரம் பேசினாக் கூட சிரிக்க சிரிக்கப் பேசி மனத்தை வெகு இலகுவாக்கிவிடும் வல்லமை உண்டு.திமுக காங்கிரஸ் கூட்டணி அமையுமா அமையாதா என இழுபறியாய் இருந்த தேர்தல் நேரத்தில் எவரேனும் இவரைப் பின்தொடர்ந்திருந்தால் நிச்சயம் சிரிச்சு வயிறு வலிச்சே நொந்து இருக்கக் கூடும்.அவை தனியாக கீழே லிங்க் கிடைக்கல மொத்தமா காப்பி பேஸ்ட் :)
ஒவ்வொரு ட்வீட்டாய் லிங்க் கொடுப்பது சிரமம்  ஒட்டுமொத்த ஹேண்டிலுமே  அப்படித்தான்.பொருத்தமாக ஹாண்டில் வைத்துக் கொண்டதில் அராத்துவும் இவரும் தனி ரகங்கள்:).என்றோ கவுண்டமணி சொன்ன பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா டயலாக் திரும்ப விஸ்வரூபமாய் இப்போ புழங்க மூல காரணமே ஒரு ட்வீட்டுக்கு இவர் அதைக் கமென்ட்டாய் போட்டு அது வலை பாய்ந்த பிறகுதான்.
"ஏன் எல்லா நடிகைகளும் புகார் கொடுக்க வேண்டுமென்றால் போலீஸ் கமிஷனரையே நாடுகிறார்கள் ஏன் SI ஏட்டு எல்லாம் கிடையாதா#பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா "
ஒரு காலத்தில் வலை பாயுதே என்றால் அது கோளாறு பக்கம் மட்டுமே.
இளையராஜா ரசிகர் .உங்களுக்குப் பிடித்த 3 இசையமைப்பாளர்கள் யார் எனக் கேட்டால் 1.இளையராஜா 2.இளையராஜா.3.இளையராஜா என்பார்:)(அப்படி ஒரு ட்வீட் பார்த்திருக்கிறேன் ) நெடுந்தூரப் பயணத்தில் சக பயணியாக கூடவே வருவது இளையராஜா மட்டுமே என்ற ட்வீட் வலை பாய்ந்தும் இருக்கின்றது.என் தோழி ஜனனி ஜனனி பாடல் தெரியாது எனச் சொல்ல அதற்கு இவர் சொன்னது :) அந்தப் பாடல் தெரியாததால் வெள்ளைகார பெண்மணி  என நினைத்துவிட்டாராம் :). 
சச்சின் ரசிகரும் கூட  .இது   போல ட்விட்டரில் அடிக்கடி மகாத்மாக்கள் உருவாகுவார்கள் :P 
 நான் என்ன எழுதினாலும் நக்கலடிக்கப்படும் பொழுதெல்லாம் இந்த ட்வீட்டை நினைத்துக் கொள்வேன் :)

"ஹெட் போனில் பாடல் கேட்கும் பொழுதெல்லாம் மெய் மறந்து கூடவே பாடி விடுகிறோம் நம் குரலின் கொடூரம் புரியாமல் "

அசந்து மறந்து கூடவே சேர்ந்து பாடிவிடும் பொழுதெல்லாம் இந்த ட்வீட் நினைவுக்கு வந்து சிரித்து நிறுத்திவிடுவேன் :)
 
 "புரிதல் இல்லாட்டி நட்பே இல்ல நட்பின் பாதையில் சில காலம்  பயணிச்சிருக்காங்க" என்ற இவரது வார்த்தைகளும் மறக்கவே முடியாதது .

திமுக - காங் கூட்டணி இழுபறிக்கு காரணம் #மு.க எழுதுன கடுதாசியெல்லாம் எடைக்கு போட்டு குவாட்டர் வாங்கி குடிச்சுபுட்டாரு ம.மோகன்

திமுக - காங் கூட்டணி இழுபறிக்கு காரணம் # தங்கபாலு குஷ்புவை மரியாதை இல்லாமல் செல்லமாக “குஷ்”குஷ்” என அழைப்பது பிடிக்கவில்லை

திமுக-காங் கூட்டணி இழுபறிக்கு காரணம் # சோனியா இந்தியாவில் தலைவியாக இருப்பது போல்,அழகிரியை இத்தாலியில் தலைவராக்க திமுக நிபந்தனை

திமுக - காங் கூட்டணி இழுபறிக்கு காரணம் # ராகுல்காந்தி சோனியாவை அம்மா என்றழைப்பது ஜெவை ஞாபகபடுத்துகிறது-திமுக குற்றச்சாட்டு

திமுக-காங் கூட்டணி இழுபறிக்கு காரணம் # அனைவரும் மட்டன் பிரியாணி தின்றுவிட்டு,ஆ.ராசாவை மட்டும் ஆடு திருடிய வழக்கில் கைது செய்தது

(வ.பா.ட்வீட் )
 
திமுக - காங் கூட்டணி இழுபறிக்கு காரணம் # ப.சிதம்பரம் அடிகடி சூட்கேசை பிடித்தவாறு திரிவது சுப்ரமணியசாமியை ஞாபகப்படுத்துகிறது


திமுக-காங் கூட்டணி இழுபறிக்கு காரணம் #அழகிரியை இந்தி கத்துக்க சொல்லி காதை திருகி முட்டிக்கால் போட வைத்து காங் கொடுமைபடுத்தியது

திமுக-காங் கூட்டணி இழுபறிக்கு காரணம் # திமுக இன்னும் ராஜபக்‌ஷேவிற்கு தமிழகத்தில் சிலை வைக்காமிலிருப்பது காங்-க்கு பிடிக்கவில்லை

 
திமுக-காங் கூட்டணி இழுபறிக்கு காரணம் # கலைஞர் வசனம் எழுதிய படங்களை பார்க்க சொல்லி மன்மோகனையும்,சோனியாவையும் சித்ரவதைபடுத்தியது


திமுக-காங் கூட்டணி இழுபறிக்கு காரணம் # பாராட்டு விழாவிற்கு ஃபாரின்ஃபிகர் வேணுமென சோனியாவை இத்தாலியில் ஏற்பாடு செய்ய சொன்னது

திமுக-காங்கூட்டணி இழுபறிக்கு காரணம்#ராசா கட்டிசோறு உண்கையில்,ஐவர்குழு பிரியாணிஅதுஇதுவெனமுக்கி அறிவாலய கஜானாவை காலிசெய்த கடுப்பு

திமுக-காங் இழுபறிக்கு காரணம் # கலைஞர் மஞ்சள் துண்டு போட்டிருப்பது RSS-BJP போல் காங்கிரஸுக்கு உறுத்துவதால்

திமுக காங் இழுபறிக்கு காரணம் # கலைஞரின் “பெண்சிங்கம்” படத்தில் சோனியாகாந்தியை நாயகி ஆக்காமல் மு.க ஏமாற்றியதால்

திமுக காங் இழுபறிக்கு காரணம் # துணை முதல்வர்-ஸ்டாலின் என கம்யூனிஸ்டின் பெயரை வைத்து காங்கிரசை எரிச்சலூட்டுவதால்

திமுக-காங் கூட்டணி முறிவுக்கு காரணம் # காங்கிரஸ் கேட்ட 63 சீட்டுகளில் ஒன்று மு.க அமர்ந்திருக்கும் வண்டியின் சீட்

 திமுக-காங் கூட்டணி முறிவுக்கு காரணம் #கிரிக்கெட்டில் இலங்கை பாக்கிடம் தோற்றதற்க்கு கலைஞர் முரசொலியில் “இரங்கல்கவிதை” எழுதவில்லை

திமுக-காங் கூட்டணி முறிவுக்கு காரணம் #பேச்சுவார்த்தையின் போது ”காடுவெட்டிகுரு”போட்டோவை காட்டி காங்-கை திமுக பயமுறுத்தி சிரித்தது


திமுக-காங் கூட்டணி முறிவுக்கு காரணம் # மு.கவின் மஞ்சள் துண்டை பார்த்து “hey..nice half Saree" னு குலாம்நபி சொன்னது

திமுக-காங் கூட்டணி முறிவுக்கு காரணம் #கிரிக்கெட்ல் ராகுல்டிராவிட்“சுவர்” என்றால்,அரசியலில் ராகுல்காந்தி “குட்டி சுவர்”என சொன்னது

திமுக-காங் கூட்டணி முறிவுக்கு காரணம் #இசையருவிக்கு உடன்பிறப்புகளே போன்செய்து “சோனியாசோனியா சொக்கவைக்கும்”பாடலை அடிகடி கேட்பதால்

திமுக-காங் கூட்டணி முறிவுக்கு காரணம் #கலைஞரிடம் நீங்க ALL CLEAR ஷாம்புவா use பண்ணுறீங்க என ஈ.வி.கே.ஸ் கேட்டது

திமுக-காங் கூட்டணி முறிவுக்கு காரணம் #அழகிரியிடம் சோனியா ”come to parliment"னு ஆங்கிலத்தில் அசிங்கமாக பேசி அவமானபடுத்தினார்

திமுக-காங் கூட்டணி முறிவுக்கு காரணம் #இலவச வண்ணதொலைகாட்சி ரொம்ப சின்னதொலைகாட்சியா இருக்கு,குஷ்புவ புள்ளா பார்க்க முடியல-தங்கபாலு


திமுக-காங் கூட்டணி முறிவுக்கு காரணம் # காமராஜர் ஆட்சினு காங்கிரஸ் சொன்னதை,என்னாது “ராமராஜன்” ஆட்சியா என திமுக கலாய்தது

திமுக-காங் கூட்டணி முறிவுக்கு காரணம் # மானாட மயிலாட நிகழ்ச்சியில் “நமீதாவோடு நானாடுவேன்” என தங்கபாலு பிடிவாதம்

திமுக-காங் கூட்டணி முறிவுக்குகாரணம் #கனிமொழியை “கனி”யென சுருக்கமாய் அழைப்பதாய் நினைத்து கொண்டு ஹாய் “ஃப்ரூட்” என ராகுல் அழைத்தது

திமுக-காங் கூட்டணி முறிவுக்கு காரணம் # திருமா மேக்கப் போடாமல் இருக்கும்மோது சோனியாவை சந்திக்க வைத்தது திமுக -காங் குற்றச்சாட்டு

திமுக-காங் கூட்டணி முறிவுக்கு காரணம் #ராமதாஸை ஜேசுதாஸா எனக் கேட்டு பாட்டு பாட சொன்னது காங்கிரஸ்

2Gல் கைதான பால்வா என்பவரை புகைப்படத்தில்தான் பார்த்துள்ளேன்-துரைமுருகன் #அதான அவரு என்ன குஷ்புவா நமீதாவா பக்கத்துல வச்சு பாக்க

பிரேமானந்தா மரணம்: நீதி விசாரணை தேவை-இந்துமக்கள்கட்சி # நிஜமாவே இவனுக வேலை இல்லாமதான் இருக்கானுக போல., ரிடிகுலஸ் ஃபெல்லோஸ்

 திருமாவுக்கு நிகழ்ந்தது நாட்டுக்கே அவமதிப்பு:ராமதாஸ் #கலைஞரோட கதைவசன பேப்பர் கைக்கு வந்துடுச்சு போல,கேப்புவிடாமா வாசிப்பாரு இனி

சென்னையில் குடிபோதையில் தகராறு செய்த பெண் போலீஸ் கைது # சட்டம் ஒழுங்கு தள்ளாடுதுனு உலகதுக்கு காட்டிருக்கு அந்தக்கா
 
திருச்சியிலும்,மதுரையிலும் மன நல மருத்துவமனைகள் அமைப்போம் #தெரிஞ்சுடுச்சு பாஸ் உங்க திட்டம்.,எல்லோரையும் பைத்தியம் ஆக்கபோறீங்க

திமுக தேர்தல் அறிக்கையில் விடுபட்டவை - விஜயகாந்த் போஸ்டருக்கே "A" சர்டிஃபிகேட் அளித்து பயங்கர திகில் போட்டோ என அறிவிப்பது

திமுகவுக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரம் # சங்கமே நஷ்டத்துல போய்கிட்டு இருக்கு.,இதுல கைப்புள்ள வேறயா 

கமலோட அடுத்த படம் “டுவிட்டர்” # 140 கேரக்டர் நடிக்கிறாராம் 

எதிர்பாராத விதமாக நான் வேட்பாளராகி விட்டேன்:தங்கபாலு #இல்லேனா சிவில்சர்வீஸ் படிச்சு கலெக்டர் ஆயிருப்பாரு..தண்ணியகுடி..தண்ணியகுடி

ஒரு பெண்ணிடம் காதலை சொல்வதில் பயம் இல்லை, என் பயமெல்லாம் அவள் ஓகே சொல்லிவிட்டால் என்ன செய்வது # ஏற்கனவே இருக்குற கஷ்டம் போதும் 

 அடிக்கிற கை அணைக்குமா,அணைக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே” # கேப்டன் கட்சியின் தர்மபுரி வேட்ப்பாளர் பாஸ்கரனின் காலர் டியூன்

 எல்லா வாயும்
எனக்கு பிடிக்கலேனா
எனது சாளரத்தில்
ஏன்டா ஏன்
கல்லறையில் நின்று பார்த்தால்
சங்கீத குடும்பம்
பெருமிதமா இருக்கு
சங்கீதம்னா உயிரு
ஒரு கவிதை படித்தேன்
நம் தன்மானத்திற்கு ஒரு ரெகுலேட்டர்
நாம்
வெறுப்பின்மை
சினிமா எடுப்பவர்களை தவிர
தி ஒரிஜினல் மூவி:)
ஒவ்வொரு பெரண்டும் தேவ மச்சான்
ராஜூ முருகனின் முழு நீள கட்டுரையும் ஒரே ட்விட்டில்
#Stopdeathpenalty
ஒவ்வொருவர் மனதிலும்
நினைவுகள்
ஆகஸ்ட் 15
சுதந்திரம் எங்க இருக்கு
டேய்ய்
”தண்ணி”
அக்குரோணி:)
இ.ம.க

இங்கே பிடித்தவர்களைப் பற்றி பிடிக்காதவைகளைப் பகிர விரும்பவில்லை என்பதை மறுபடியும் நினைவூட்டுகிறேன் :)

பதிவுகளனைத்தையும் படித்துவிட்டு ஒரு நண்பர் சொன்னது நீங்க என்னமோ ஒவ்வொரு பதிவுலயும் ஒவ்வொருத்தர் பத்தியும் எழுதறீங்க ஆனா அனைத்திலும் கலக்குவது தாத்தா மட்டுமே "என்று.
அட!ஆமாம் அந்த அளவுக்கு அவரது குறும்புத் தனங்கள் வெகுவாக ஈர்த்திருக்கின்றன :) டிவிட்டருக்கு வருவது நேர விரயமாய் ஒரு தடவை கூடத் தோன்றியதே இல்லை என்றவர் இன்று ஆளையோ காணோம்.தனிப்பட்ட முறையில் நெருக்கமான நட்பில்லை.நிஜமாகவே வேலைப்பளு என்றால் சரி.வேறு ஏதேனும் ....கற்பனை பண்ணவே பயமாக இருக்கிறது.எப்பவும் போல திரும்ப வாங்க தாத்தா புது டிவிட்டர்களும் மகிழ வேண்டாமா ?:)
நிற்க : தாத்தா DM வந்து நன்றி சொல்லிவிட்டுப் போனார் :)குத்துக்கல்லாட்டம் நல்லாத் தான் இருக்கிறாராம்.வேலைப்பளு அதிகமாம் வார இறுதி குடும்பத்துடன் கழிக்கிறாராம் அதான் வர முடியலயாம் ஆனா ரஜினி மாதிரி எப்போ வேணும்னாலும் வருவாராம் :)
அவசியம் சீதாவையும் வரச் சொல்லுங்கள் என்று சீதா ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் கூப்பாடு :)இதோ ஒரு SMS . come back cheethaa என அனுப்பி இருக்கிறேன் :) பார்க்கலாம் என்ன பதில் வருகின்றது என்று :)
 

நான் ரசித்த நல்ல சில  த்வீட்டுகள் உங்கள் பார்வைக்கு :)

வலி நல்லது 
எனக்கு மிகவும் பிடித்த மறக்கவே முடியாத ட்வீட் :))) 
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
கேக்குறாங்கல்ல சொல்லுங்க :)
இசை.
சிம்மாசனங்கள்
நிஜம்தான்! 
நிச்சயமாக முடியாது
ஓவர் ஓவர்:))
மிகுந்த வலி
போரடிக்கிறது
இன்னும் மெச்சூர்டா
கணவனை நான் காணும்போது
மறக்க தெரியவில்லை 
ஷேர் ஆட்டோசனம் 
பிரம்மாஸ்திரம் 
பல மனப்போராட்டங்கள் 
மரண தண்டனையை விட கொடுமையானது
தமிழ் எழுத்துகள் உச்சரிப்புப் பயிற்சிக்கான வரைபடம். 
வெளிப்படுத்த முடியா வண்ணம் 
வாழ்க்கையில் ஜெயிக்கவில்லை என்றால் 
சந்தே சிவம்:) 
CC : to நித்தி &கோ  

மொய்  
சலனம் ! 
தற்கொலை  
விற்றவள் முகத்திலும்  
எங்களுக்கு எவ்வளவு இருக்கும்? 
"மாப் கி ஜியே: :) 
என் செல்லம் 
வாழ்க்கையில் என்ன நடந்தாலும் :) 
பிடித்துப் போகிறது நமக்கு 
 எங்கோ யாரோ பேசிய வாய் வழி வார்த்தைகள்
உன் மௌனங்களில்  
தோஷத்துக்கெல்லாம் மேட்சிங் :) 
வேலைக்குப் போகும் பெண்கள்  
நீ கொடுத்தகாதல்வலி 
வித்தியாசமில்லை 
என் கற்பனைகளின் அளவு 
முகமூடி 
காதல்...
தோழியின் தோழி  
விகடன் இனி ட்வீட்டை தனக்கு @mention போட்டால் மட்டுமே வ.பா. என்ற பொழுது :) 
சொர்க்கமே என்றாலும்  
அர்ப்பணம்.. 
 தவறாமல் தவறாக சமைப்பது எப்படி ?:)
 Picture :)
மிகப்பெரிய பொறுமைசாலி 
காக்கா 
தமிழனின் தனிசிறப்பு... 
மன்மோகனிடம் ஒரே ஒரு கேள்வி 
அதானே என்னது இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு :) 
அக்காங்..அப்பவே விஞ்ஞானி 
ஒரு 66 A பார்சல் :) 
கற்களைத் தேடும் கண்கள் 
கொஞ்சம் சிரிப்பையும்  
சமுதாயம் 
#Mullaperiyar 
#TVJ 
#TVJ 
கறுப்பான பெண்களை  
போலி முகமூடி 
என் இனமடா நீ...:)) 
ஆமாம் எதுக்கு அடிச்சான் ?? 
மனிதாபிமானம் 
#kolaveri :) 
.நான்..நானாத்தான் :) 
முதியோருக்கு சிறப்பு மருத்துவமனை 
காலிங்பெல் 
அன்புள்ள முதல்வருக்கு:) 
கொடுமை! 
காரணம் தெரியாமல் அழும் தருணங்கள்  
சச்சினுக்கு வந்த நிலைமை  
நிதர்சனம்  
வளர்ச்சி என்பது 
நிர்வாணமாய்  
திருமணம் 
ட்விட்டர்/பேஸ்புக்:) 
7ம் அறிவுகளும், வேலாயுதம்களும். 
சுத்தம் என்பது  
அதெப்படி நீ அப்டி சொல்லலாம் 
அங்கவை இங்கவை :) 
’Tweet' பட்டனை அமுக்குமுன்  
ஏன் புரியவில்லை  
தருமரா தர்மரா? எது சரி?1 
தருமரா தர்மரா? எது சரி?2 
தங்கச்சி செல்லம் 
இருள் பழகியது 
பேசிக்கொண்டே இருக்கும் பெண்  
கள்ளத்தனம்  
சிலரால் மட்டும்  
செய்யலாமே! 
வரம் please :) 
நிறைந்துவிடாத  
ஆயுசு 100  
குடும்பத்தோடு நேரம் செலவிடுவதாக 
கடவுள் 
காலம் குத்திக் கிளறும் போது :)) 
உத்தமம்... 
அனுபவம் 
பெண்களின் அடிப்படை DNA 
தீபாவலி:) 
மரூஊஊ இதயம்  
அம்மாவின் நியாபகமே  
தமிழன் மட்டுமே செய்வான் இதை. 
கனவுகளின் க்ளைமாக்ஸ்  
அட்வைஸ் இருக்கே 
please do it :)
காதலி&மனைவி :)
please contact him :)
வாழ்க்கை:)
இந்தக் கணமே 
'வெவரமா கேள்வி
true :)
பேசிச்சென்ற பின்னும்
தலைமுறை
நண்பர்களே..
பென்ஷன் :)
பாபா மரணத்திற்கு காரணம்
கேட்கப்படாத கேள்விகளும்

இனிமே சீரியல் பெண்கள் மட்டும் தான் பார்க்கிறாங்கன்னு யாராச்சும் சொல்லுங்க :)

என்னாது 
போய் ஆகறதைப் பாருங்க.  
https://twitter.com/iKrishS/status/143752190597677056 



இது டிவிட்டர்களுக்கான அப்ரைசல் அல்ல பிடித்தவர்கள் என என் பார்வையில் சொல்வது வேறு சிறந்தது என பொதுப் பார்வையில் சொல்வது வேறு எனக்குப் பிடித்தவர்கள் உங்களுக்கும் பிடித்தமானவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை போலவே உங்களுக்குப் பிடித்தமானவர்கள் எனக்கும்  .ரசனைகள் மாறுபடும்
இணையத்தில் ட்விட்டர் FB blog எல்லாம் பார்த்து படிச்சப்போ நான் மிகவும் உணர்வது என் தந்தை இன்மையைத் தான்:( அரசியல்,இலக்கியம்,நகைச்சுவை ,ஆழ்ந்த தமிழ் அறிவு, இசை இப்படி எல்லாம் தெரிந்த ஆல் ரவுண்டர்.அவர் மட்டும் தற்பொழுது இருந்திருந்தால் நிச்சயம் இணையத்தில் அவருடைய மகளாகவே கர்வத்துடன் அறியப்பட்டிருப்பேன் என்பது என் துணிபு.குறைகுடங்களே இங்கே அதிகம் கூத்தாடும் பொழுது அவர் இல்லாதது பெரிய குறையாக இருக்கின்றது :((  

வந்த  புதிதில் சில சினிமா பிரபலங்களை ஆர்வக் கோளாறில் பின் தொடர்ந்ததுண்டு இரண்டு நாட்கள் கூட நீடிக்க முடியல.மிகச் சாமானியர்களின் எழுத்துகளை விட  பிரபலங்கள் அப்படி
ஒன்னும் சுவராசியமா எழுதிடல.என்னதான் வலைபாயுதேவுக்காக என குறை சொன்னாலும் பல சாமான்யர்களுக்கு இது தங்களின் திறமைகளை வெளிப்படுத்த ஒரு அற்புதமான தளமாக இருந்திருக்கின்றது.கிரியேட்டிவிட்டி ,கவிதை,நகைச்சுவை,பல சுவராசியமான தகவல்கள்,ஒவ்வொரு நிகழ்வுக்கும் சாமான்யனின் குரல்கள் எந்த ஒரு சூழலையும் கலகலப்பாக்கும் திறன்,அரசியல் நிகழ்வுகளுக்கான ஆதரவும் எதிர்ப்பும் இப்படி சகலமும் கொண்ட திறமைசாலிகளைக் கொண்ட தளமாக ட்விட்டரைப் பார்க்கின்றேன்.எந்த மெய்யுலகப் பிரபலங்களும் அவர்கள் சார்ந்த துறை தவிர இவ்வளவு அப்டேட்டடாக இருப்பார்களா என்றால் அது கேள்விக் குறிதான்.அப்போ வக்கிரம் பிடித்த மனிதர்கள் இங்கே இல்லையா என்றால் சர்வ நிச்சயமாய் உண்டு.ஆனால் நல்ல செடிகள் நடுவே களைகளும் தவிர்க்க முடியாது.மேலும் அவர்களைப் பற்றி இங்கே வேண்டாம் :)
காதல்,காமம்,இசை,குத்துவெட்டு,கவிதை ,மொக்கை ,ஜால்ரா,தத்துவம், அரசியல் அனைத்தும் கலந்த கலவையானது ட்விட்டர் :)தேவையானதை எடுத்துக் கொள்ளலாம்.பிடிக்காவிட்டால் இனி எவரையும் தொடர்வதே இல்லை என்று முடிவு என் TL கலகலப்பாகவே இருக்கின்றது :)

" என் follow  en உரிமை (un)follow un  உரிமை :)) "

அரசியல் ,சமகால நிகழ்வு தத்துவம் என எதைச் சொன்னாலும் ஒரு குற்றம் சொல்லும் குணம் உள்ளவர்கள் இங்கே உண்டு.அதனால் தான் எனக்கு பிடித்த இசையை என் முகமூடியாக என்  அடையாளமாக ஆக்கிக்கொண்டது.டிவிட்டரைத் தாண்டிய என் உலகம் முற்றிலும் வேறானது.பக்கத்துவீட்டுப் பெண்ணின் முகம் தெரியாது அவளுக்கு நான் பேசுவேனா என்றும் தெரியாது.நீங்கள் சொல்கின்ற படங்கள் அனைத்தையும் உடனே பார்த்துவிடும் வேகம் கிடையாது.நான் டிவிட்டருக்கு உரையாடவே வருகின்றேன் :) பிடித்தால் follow பிடிக்காவிட்டால் unfollow .அதையும் மீறி ட்வீட்டுகள் கண்ணில் படவே கூடாது என்றால் block என்றொரு வாய்ப்பும் உண்டு :)

 "என் டிவிட்டுகளில் நான் இருக்கிறேன் ஆனால் என் டிவிட்டுகள் மட்டுமே நான் அல்ல :) "

பேயோன் சொன்னதையே திரும்ப ரிட்வீட் செய்கின்றேன் "உங்கள் நேரத்தை என்னால் திருப்பிக் கொடுக்க முடியாது .என் எழுத்துகள் பிடிக்கவில்லை எனில் படிக்காமல் செல்வது உங்களுக்கே உத்தமம் பிடிக்காத புரியாத ஒன்றை தேடித் பிடித்தேனும் படித்து மன அழுத்தம் தேடிக் கொள்வது வீண் வேலை " 
அல்லது கண்ணில் பட்டால் ஸ்கிப் செய்து செல்லலாம் :)


ஒத்துவராதை உதறித் தள்ளிட்டு பிடிச்சதை பிடிச்சவங்களோட பேசி பகிருங்கள் வாழ்க்கை மட்டுமல்ல டிவிட்டரும் அருமைதான்  :)

 சொக்கனிடம் இருந்து ஆரம்பித்து அவருடனே முடிக்கின்றேன் :)
ட்விட்டர் இப்படி இருந்தா நலம்:)

8 comments:

maithriim said...

ஒவ்வொரு வரியும் ஆழ்ந்து சிந்தித்து எழுதியிருக்கிறீர்கள். மெத்தப் படித்த பலர் உள்ளனர் ட்விட்டரில் ஆனால் உங்களை போல பகுத்து, ஆராய்ந்து எழுதுபவர் எனக்கு தெரிந்து யாருமே இல்லை என்று ஆணித்தரமாகக் கூறுவேன். மிகுந்த பொறுமையுடனும் நிதானத்துடனும் எழுதியிருப்பது ஆனந்தத்தைத் தருகிறது. ட்விட்டர் பற்றி தெரிந்து கொள்ள இந்த தொடரை அனைத்து புது/பழைய ட்வீட்டர்களும் படித்தல் நலம் :-)

என்னை பற்றி எழுதியிருக்கும் பகுதியை படித்த பொழுது எனக்கு கண்களில் நீர் துளித்துவிட்டது. நன்றி.

amas32

jroldmonk said...

எல்லா பதிவையும் படிச்ச எங்களுக்கே மூச்சு வாங்குது அப்ப எழுதின உங்க நிலைமை :-) இத்தனைக்கும் இன்னும் முழுசா படிக்கலை பதிவுகள் படிச்சாச்சு அட்டாச் செய்திருக்கும் டிவிட்டுகள் நிறைய பாக்கி இருக்கு இது போக நிறைய ப்ளாக் லிங்க்ஸ் வேற.லீவ் போட்டு படிச்சா தான் முடிக்க முடியும் போலிருக்கு.ஆகமொத்தம் நீங்க வீட்டு வேலை ஆபிஸ் வேலை எல்லாத்தையும் விட இதே நினைப்பா இருந்து எழுதி முடிச்சிருப்பீங்கன்னு - வேறென்ன அவதானிப்பு தான் ;-)

ஆனாலும் நீங்க ஞாபக சக்தில என்னைய மிஞ்சிட்டீங்க போங்க பல விஷயங்களை நுணுக்கமா ஞாபகம் வச்சுக்கிட்டு விவரிச்சது ஆஆஆச்சர்யம்.ஏதோ நானே அவர்களை பற்றி எழுதியது போலவும் பாராட்டியது போலவும் பல இடங்களில் உணர முடிஞ்சது அப்படி ஒரு கூர்மையான அவதானிப்ஸ்.உதாரணமா இத்தனை நாள் வரைக்கும் நானும் ஒலைக்கண்ணன்னு தான் படிச்சிட்டு இருந்தேன் இது போல இன்னும் நிறைய சொல்லிட்டே போலாம்.வெறும் பாராட்டா மட்டும் இல்லாமல் விளையாட்டாய் நைசா அவர்களை காலை வாரியதையும் பகடி செய்ததும் இந்த நீண்ட பதிவுகளை சுவாரஸ்யமாக்கிய விஷயங்கள்.அதுபோல பாசிட்டிவான விஷயங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டதும் விருப்பு வெறுப்பு இல்லாமல் எழுதி இருந்ததும் கவனிக்க முடிஞ்சது.பட் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு ;-)

என்னோட பழைய டிவிட்ஸ் சிலது திடிர்னு ஆர்டி,பேவரைட் ஆகவும் ஏன்னு தேடி பார்த்தா என்னைப் பற்றி எழுதிய பதிவு செம சர்ப்ரைஸ்.ஆரம்பிச்ச விதமே அழகு நிஜமாவே ரொம்ப ரசிச்சேன் :-) அந்த "தைரியம்" கமெண்ட் எனக்கே மறந்து போன ஒண்ணு அதை திரும்ப பாத்துட்டு அர்த்த ராத்திரியில் விழுந்து விழுந்து சிரிச்சேன் ;-)) கண்டிப்பா என்னோட ஸ்வீட் மெம்மரீஸ்ல என்னை பற்றிய பதிவை படிச்ச நிகழ்வும் ஒண்ணா இருக்கும் :-) நான் டிவிட்ட ஆரம்பிச்ச சமயத்தில் எழுதிய டிவிட்டும் பதிவு அப்லோட் ஆன நாளில் எழுதிய டிவிட்டும் செலக்டட் டிவிட்ஸில் இருந்ததை பார்த்த போது இதற்கு பின் எத்தனை பெரிய உழைப்பு இருக்குன்னு புரிஞ்சிக்க முடியுது அதான் நன்றின்னு ஒரு வார்த்தையில் முடிக்காம இவ்வளவு லென்தா கமெண்டிங்...

நீங்க வேணா //திமிர் பிடிச்ச உமா// வாகவே இருந்துடலாம்னு நினைக்கலாம் ஆனா என்ன செய்ய இந்த பதிவுகள் எல்லாம் உங்களுக்கு தனி மதிப்பை ஏற்படுத்தி தரும்,மற்றவர்கள் இடத்தில நல்ல அபிப்ராயத்தையும் ஏற்படுத்தும்.....அன்பும் வாழ்த்துகளும் :-)

Anonymous said...

Nalla pathivukal. Aanal oruthalai patchamaanathu. Ellavatraiyum padithen. oru saga twitter engira muraiyil, oru vinnappam. unga blog padikkiravanga, twitterlaye ivanga mattumthaan best nu ninaika vaippu irukku. so pls give the comment at last : "Ithu enaku pidiththavarkal list mattume"

Coz, i wanted to say you missed the legends
@iparisal, @Rajanism - The Trend Setters
@kolaaru - As he says, he is kadavul. His views are poetic.
@WriterCSK, Puthagapuzhu - Who can think broad and they are intellectuals
@Thoatta, @Alexxious - Best Reaching tweeps and sharp comments
@thiruttukumaran, @PKSGR - Stress Busters and timeline changers
@iKaruppiah - Best emerging poet in twitter
@settaikarran - who is dare to stand infront of any issues for friends or in society
@rasanai - his comments to other tweeps make us laugh
@kalasal, @raajaacs - - Another perfect tweeters, values each letter.
and.... innum niraiya per.

so....

உமா கிருஷ்ணமூர்த்தி said...

நன்றி அம்மா :) நன்றி மாங்க் :)

உமா கிருஷ்ணமூர்த்தி said...

அனானி அவர்களுக்கு எனக்குப் பிடித்தவர்கள் என்று சொன்னபிறகு அது என் தலைப் பட்சமாக தானே இருக்கும் :)எனக்குப் பிடித்தவர்கள் எனச் சொன்னேனே அன்றி இவர்கள் மட்டுமே சிறந்தவர்கள் என என் பதிவுகளை முன்வைக்கவில்லை நீங்கள் எதற்கும் முதலில் இருந்து முன்னுரைகளேனும் படித்துவிட்டு வருவது நல்லது .மேலும் நீங்கள் குறிப்பிட்ட நபர்களை நானும் நன்கு அறிவேன் அதனால் யாரை எங்கே வைக்க வேண்டும் என்பதுவும் தெரியும்:)

Karthi said...

நீங்களே குறிப்பிட்டது போல்.. இது ஒரு தலை பட்சம் தான்.. ஆனால் இதில் எனக்கு தவறேதும் தெரியவில்லை.. சில வருடங்களாக வேடிக்கை மட்டும் பார்க்கும் எனக்கே பிடித்தவர்கள்/ பிடித்த எழுத்து என இருக்கும்போது, உங்களை போல interact செய்பவர்களுக்கு நிறையவே இருக்கும். இருப்பினும் நான் ரசிக்கும் சிலர் இதில் விடுபட்டபோது கண்டிப்பாக வருத்தம் தான். ஆனால் வேறு எவரேனும் அவர்களை பற்றியும் எழுதுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு..

நீங்கள் கொடுத்துள்ள அனைத்து ட்விட் லிங்க்ஸ்ம் படித்தேன். அதில் அனைத்தையும் ரசித்தேன். நன்றி...

நீங்கள் favourite பண்ண எல்லாவற்றையும் என்னையும் செய்ய வைத்து விட்டர்கள்.. ஆனால் இந்த பதிவை விட, இதற்க்கு முந்தைய 5 பதிவுகளும் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.. ஏனோ அதில் இருந்த நுணுக்கமான ஆய்வு இதில் இல்லாதது போல் இருந்தது.. அதற்க்கு இரண்டு கரணங்கள் இருக்கும் என்று கருதுகிறேன். ஒன்று பதிவின் நீளம்.. மற்றொன்று இதை டைப் பண்ணவே உங்களுக்கு கடினமாக இருந்திருக்கும் என உணர்கிறேன்..

மீண்டும் ஒரு முறை கூறுகிறேன்..
நன்றி.. நன்றி...

உமா கிருஷ்ணமூர்த்தி said...

புரிதலுக்கு நன்றி :) நீங்கள் கணித்தது சரிதான் நீளமாக எழுத எனக்கு நேரம் போதவில்லை இதிலே சிறிது சிறிதாக குறிப்பிட்டவர்களைப் பற்றி பிறிதொரு சமயத்தில் விரிவாக எழுத ஆசை :) அதனால் ஒரு சில வரிகளோடு நிறுத்தி விட்டேன்.டைப் பண்ண வெகு சிரமம் ஒரு சிலரை பற்றி மறந்துவிட்டேன் குறிப்பிட :)பார்க்கலாம் அடுத்து எப்பொழுது வாய்ப்பு வாய்க்கிறதோ அப்போ சிலரைப் பற்றி சொல்வேன் அதில் உங்களுக்குப் பிடித்தவர்களும் இருக்க கூடும் :))

hey itz me kuruvu said...

உனக்கும் எனக்குமான நட்பு நமக்கு மட்டுமே தெரிந்தால் போதுமானதுன்னு நம்ம கருத்துப்படி இந்த தலைப்பை எழுதும்போதே உங்களிடம் சொல்லியும் நம் நட்பை எழுதிடீங்க ..நமக்குள்ள என்ன சம்ப்ரதாய நன்றிகள் , உங்கள் அன்பிற்கு என் முத்தங்கள் ..
ட்விட்டர் நினைவுகளில் நண்பர்கள் ஒவ்வருவரின் சிந்தனையை நுண்ணிய கவனிப்போடும் ,அவரவர்கள் எழுதியதை அவர்களே மறந்திருந்ததை நினைவு படுத்திய விதமும் , அனைவரையும் ஆச்சரிய படுத்தியிருந்தாலும் உங்கள் எழுத்தை திறமையை முன்பே அறிந்திருந்ததால் இந்த பதிவினால் எனகொன்றும் வியப்பில்லை ..பலமுறை பத்திரிகைகளுக்கு உங்களை எழுத தூண்டினாலும் இது வரை நீங்கள் அது பற்றி முயலாததற்கு எப்பவுமே உங்கள் மேல் கோபமுண்டு .
ஜூனியர் மான்க் சொன்னது போல ஒரு நாள் என்ன ஒரு வருடம் எடுத்து நீங்க குடுத்த லிங்க் எல்லாம் .படிக்கணும் .புத்தகத்திற்கு முன்னுரை போல் புதிதாக வரும் தமிழ் ட்விட்டேர்கள் இந்த ஆறு கட்டுரையை படித்தாலே பல் சுவை கதம்பமாக மிகவும் பொறுமையாய் நீங்கள் தொகுத்து தந்ததிலேயே பலரின் சிந்தனைகளை ரசிப்பார்கள் ..இனி உங்கள் எழுத்துகளை ரசிக்க மட்டும் இல்லாமல் பத்திரிகைகளுக்கு எடுத்து செல்லவும் உங்களின் நண்பர்கள் உங்களை ஊக்குவிக்க ஆசைபடுகிறேன் ..
பின்குறிப்பு:எழுத்து பிழையை மன்னிக்க உங்களுக்கான கமெண்டை உங்களிடமே அடித்து தர சொல்ல மனம் ஒப்பவில்லை ..