Wednesday, December 14, 2011

வாழ்க்கை!

ஒரு மனிதனுக்கு மரண பயம் வந்துட்டா எப்படி எல்லாம் நடந்துகொள்ளக் கூடும் என்று ஒரு உறவினர் மூலம் காண்கிறேன் வாழ்ந்த காலத்தில் எல்லாம் சுயநலமே பெரிதாகக் கருதி அத்தனை பேரையும் துச்சமென அவமதித்தவர்.அவர் நடவடிக்கை பிடிக்காமல் உடன்பிறப்புகள் சொந்தங்கள் அத்தனையும் ஒதுங்கிக் கொண்டன.இப்பொழுது தேடிச் சென்று ஒவ்வொரிடமும் வலிய பேசுகிறார்.சண்டை போட்ட உடன்பிறப்புகளிடம் கண்ணீருடன் உரையாடுகிறார்.ஆனா அவர் செய்த அநியாயங்கள் மனதைச் சுட அவரை முழுமையாக நம்ப மறுக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

என் அம்மாவிடம் வந்து சித்தி உங்களைப் பார்க்கணும் போல இருந்தது என்று வெகு நேரம் பேசிவிட்டுச் சென்ற பொழுது கூட ஏதோ காரியம் ஆக வேண்டியிருக்கு போல அதான் வந்திருக்கிறார் என்று ஒதுங்கிக் கொண்டேன் நானும் .அவர் சென்ற பின்பு அம்மா வருத்ததுடன் சொல்லியே தெரியும்.அம்மா சட்டென்று நம்புபவர் என்பதால் அப்பவும் நான் நம்பல ஆனா தொடர்ச்சியான அவர் நடவடிக்கைகள் அவர் நிஜமாகவே உள்ளூர வருத்தம் கொண்டு அலைகிறார் என்றே புரிந்தது.இதயம் மிகவும் பலவீனப்பட்டு பிரச்சனை செய்து கொண்டிருக்கின்றது போல.அத்தனை பேரின் ஒட்டுமொத்த வெறுப்பும் நெஞ்சைச் சுடுகிறது போலும்..அவர் உடன்பிறப்புகளிடம் அம்மா தான் பேசுகிறார் முடிந்த அளவு பேசுங்கப்பா பாவம் அவன் என்று.மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை  என்பது வாழ்க்கைக்கும் பொருந்தும் எதுக்கு அவ்ளோ வேதனைப் படுத்தணும் இன்னைக்கு எல்லாம் நினைச்சு வருத்தப் படணும்?ஆனாலும் இந்த அளவாவது உணர்கின்றாரே ஆச்சர்யம் தான் எங்களுக்கு.(எங்கள் குடும்பத்திலும் அத்தனை இடைஞ்சல்கள் முடிந்தவரை கொடுத்திருக்கிறார் இருப்பினும் மன்னித்தது எங்கள் தாய் மனம்) ஆனாலும் அம்மாவைப் போல உருகாமல் எங்களால் தள்ளி நின்று அனுதாபப்படுவது தவிர வேறு எதுவும் செய்ய முடியல.

இப்பவும் அவரை உறவுமுறை சொல்லி அழைக்க கூட மனம் வரல ஹ்ம்ம்..வாழ்க்கையில் எவ்வளவு இருக்கு என்பதற்கும் இவ்வளவு தான் வாழ்க்கை என்பதற்கும் இடைப்பட்டது அந்த நபருடைய வாழ்க்கை.முடிந்தவரை இனி செல்லுகின்ற நாட்களில் பிரியமானவர்களை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்று மட்டும் தோன்றுகிறது..

Thursday, December 1, 2011

அம்மா!

அம்மா சமையலைச் சிலாகிக்கும் பாக்கியம் நமக்கு மட்டும்தான் அடுத்த தலைமுறை வீட்டில் வேலைபார்ப்பவர்களைப் பற்றிச் சொல்லக் கூடும் ..
***************************************************************************
உருக்கமா ஒரு பொய் சொல்லிவிட்டால் உடனே நம்பிவிட அம்மாவால்
மட்டுமே முடியும்
******************
பிள்ளைகளிடம் விரும்பி ஏமாறுபவர்கள் ஏமாறுவதை விரும்புபவர்கள் 
அம்மா 
*******
நலமில்லை என பொய்
சொன்னாலேபார்க்காமல்  நம்பிவிடும் அம்மா
நலமாகிவிட்டது என எத்தனை முறை
சொன்னாலும் கண்களால்
அளவெடுத்துக்கொண்டே இருக்கின்றாள்..

***********************************************
  நாலு தடவை சொல்லி விட்டு ஐந்தாவது தடவை மனசில்லாமல் தானே
அந்த வேலையைச் செய்துவிடுவது அம்மாவாகத் தானிருக்க முடியும்
*************************************************************************
சிறு வயதில் அம்மா சீயக்காய் தேய்த்துப் பராமரித்தவரை
கேசம் நன்றாகத் தானிருந்தது #கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் 
**********************************************************************
தலையில் துண்டு கட்டிக் கொண்டு வேலையில் தீவிரம் காட்டும்
வெள்ளிக் கிழமை தேவதைகள் #அம்மா 
*****************************************
அப்பாவின் சுடு சொற்களை விடப்
பெரிதாக அம்மாவின் அடிகள் பாதிப்பதே இல்லை 
***************************************************
சாப்பிடப் பிடிக்காததை உடனே எடுத்துப் போட
அம்மாவின் தட்டு எப்பொழுதும் அருகில் தேவைப்படுகின்றது 
வேண்டாமென ஒதுக்கிய பின்பே தான் உண்ணும் அம்மா 
***********************************************************
அம்மா உணவை ஊட்டுவிட்ட காலங்களில் உணவின் சுவை
இன்னமும் அதிகமாக இருந்தது #ஏக்கம் 
*****************************************
எளிமையாகச் சாப்பிடுவது நல்லது 
அம்மா ஊரில் இல்லாத தருணங்களில் மட்டும்  
ரொம்ப நேரம் யார் சமைக்கிறது :)))
*********************************
பெரும்பாலும் அம்மாவே பெண் குழந்தைகளை புகுந்த வீட்டில் 
எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று மனதளவில் தயார்
செய்து விடுகின்றார்கள் 
*************************


 










அனாவசியப் பொங்கல்களும் அத்தியாவசியப் பொங்கல்களும் !


நடிகர் கார்த்தி என்ன சொன்னார் அது எப்படி சொல்லலாம் என தமிழ்ச் சமூகம் பொங்கிக் கொண்டிருக்கின்றது.அப்படி என்ன சொல்லிட்டாரு மனுஷன் தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்களை அதிகம் பிடிக்கும்.FRAME க்கு FRAME கைதட்டல் கிடைக்கும் இது அங்க இல்லன்னு சொன்னார்.ஒருத்தனை இன்னொருத்தனை விட ரொம்பப் பிடிக்கும்னா இன்னொருத்தன் ரொம்பக் கேவலமானவன்னு தானா அர்த்தம் கற்பிச்சுக்கறது.இதுல தமிழர்களை இழிவு படுத்தி எதாச்சும் இருக்கிறதா எனக்குத் தெரியல.மும்பைல இருந்து வர்ற நடிகைகள் எல்லாம் என்க்கு மும்பை FANS விட டமில் FANS ரொம்போ புட்ச்சிர்குது.ன்னு யாராச்சும் மண்டையை ஆட்டி ஆட்டிச் சொன்னா உடனே அதை நம்புற அதே ஆளுங்க தான் இதையும் நம்பிருப்பாங்க.


போற இடத்தில பொழைப்புக்கு தகுந்தமாதிரி பொய்யா பேசுறவங்க சினிமாக்காரங்க மட்டும் தானா?ஏன் சராசரி ஆட்கள் இல்லையா?.சரி அதுல உண்மை பொய் ஆராய்வது அப்புறம் இருக்கட்டும்.இதுக்காக பொங்கற தமிழ் உணர்வாளர்களே இன்னும் நிறைய இருக்கு இதை விட ஜாஸ்தி பொங்க.அதையெல்லாம் ஒப்பிடும் பொழுது இது சப்பை விஷயம்.தமிழ் நாட்டுப் பொண்ணுதான் ரமலத்.முடிஞ்சவரை போராடுச்சு.அதுக்காக நயன்தாரா படம் பார்க்கிறதை நிறுத்திட்டீங்களா? 
முல்லைப் பெரியாறுன்னு  ஒரு விஷயம் ஓடிகிட்டு இருக்கு பாஸ் ஒட்டுமொத்த கேரளாவும் முழுப் பூசணிக்காயை இல்ல ஒரு அணையவே சோத்துல மறைக்கிறாங்க.அங்க கொஞ்சம் பொங்கறது.ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் ன்னு ஆரம்பிச்சதோட சரி அப்புறம் அது என்ன ஆச்சுன்னே தெரியல அதுக்கு கொஞ்சம் பொங்கறது .இதையெல்லாம் விட்டுட்டு எதுக்கோ எல்லாம் பொங்கறீங்க .நடிகனை கேவலமாகவும் பார்க்கவேணாம்.பால் குடம் எடுத்து உயர்த்தியும் பார்க்க வேணாம்.ஒரு தொழில் பண்ற நம் போலவே குறைகள் உள்ள ஒரு சராசரி மனுஷன் தான் நடிகனும்.ஏதோ படம் பார்த்தோமா நல்லா இருக்கு இல்லன்னு சொல்லிட்டுப் போனோமா ன்னு இல்லாம மாறுபட்ட ரசனை உள்ளவர் எந்த நேரம் பார்த்தாலும் குழாயடிச் 
சண்டையை விடக் கேவலமா சண்டை போடுறதை இணையத்தில் தான் அதிகம் பார்க்கிறேன்.படிப்பு என்பது சபை நாகரிகத்தையும் கற்றுக் கொடுப்பதாக அமைய வேண்டும்.இல்லாட்டி அந்தப் படிப்பு வீண்தான்.தொழில்நுட்பங்களை வக்கிரங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள்.சூர்யா ஒரு ஃ பேர்னஸ் க்ரீம் விளம்பரத்தில் நடிக்கவும் அதற்கும் இதே போல சவுண்டு.ஒரு நடிகன் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் நடிப்பது மட்டுமே அவன் வேலை.எய்தவன் இருக்க அம்பை நோவது ஏன்?காலம் காலமாக இதே போல ஃ பேர்னஸ் க்ரீம் விளம்பரம் வரலையா?அப்போ எல்லாம் எங்க போனாங்க?அவங்க பிரச்சனை அந்த விளம்பரப் படத்தின் மீது அல்ல சூர்யா மீது.சச்சின் பெப்சிக்கு நடிச்சப்போ சச்சினையும் அப்போ திட்டலாமா?ஒரு ப்ளாக் ல பார்த்தேன் காசு கொடுத்தா அவங்க அப்பன் கூட நடிப்பார் கண்ட விளம்பரத்தில் என்று படு அசிங்கமான வார்த்தைகளை கமென்ட் ல உபயோகப்படுத்தி இருந்தார்கள்.சிவகுமாரைச் சொல்லும் முன் "இது ராஜபாட்டை அல்ல"படிச்சுட்டு பேசணும்.காதலை எதிர்க்கும் அப்பா ரோல் அது இதுன்னு நிறைய பண்ணியாச்சு.புதுசா ஒண்ணுமில்ல நடிக்கன்னு நடிப்பதையே மனிதர் நிறுத்தி வச்சிருக்கார்.பணம் மட்டும் தான் குறிக்கோள் என்றால் பண்றதுக்கு ரோல் இல்லாமலா போகும்?இதையெல்லாம் சொல்வதால் தீவிர ரசிகை என்று எனக்கும் முத்திரை குத்திடாதீங்க.
கேவலமாப் பேசுறதைக் கண்டிக்கிறேன் பேர்வழின்னு அதைவிடக் கேவலமா பேசி நோக்கத்தையே சிதைப்பதில் தான் தீவிரம் காட்டுகிறார்கள்.அஜித் பிரியாணி போட்டார் ன்னு ஒரு மேக் அப் மேன் சொன்னதை சொன்னா உடனே வினவுல அதுக்கு ஒன்றை முழத்துக்கு கட்டுரை எழுதறாங்க.பிரியாணி போட்டப்போ அஜித் கூட அவ்ளோ யோசிச்சு இருக்கமாட்டாரு.விஜய் படத்துக்கு பாடை கட்டி FB ல போட்டோ அதுக்கு 657 LIKES .எவ்வளவு வக்கிரம் பிடித்தவர்கள்?இதுல அரசியல்வாதியை சொல்றதுல எங்க இருந்து இவங்களுக்குத் தகுதி வருது?கிண்டல் அடிக்கலாம் படம் சரியில்லாட்டி ஆனா இருபத்திநாலு மணி நேரமும் அதே பொழைப்பா திரியரவங்களைப் பார்த்தா அருவெறுப்பா இருக்கு.வீட்ல பெத்தவங்க அடிச்சு வளர்த்திருக்கணும் இது மாதிரி மறை கழண்ட கேசுங்களை எல்லாம்.
சினிமா மீது ஆர்வம் இருக்கலாம் ஆனா மோகம் அனாவசியம்.அதனால் தான் சினிமாக்காரங்க அரசியல் க்கு படையெடுத்து வராங்க.சினிமாத்துறையில் இருந்து அரசியலுக்கு வரக் கூடாது எனச் சொல்ல வரல.ஆனா ஸ்க்ரீன் ல கைதட்டறாங்க நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருப்போம் ன்னு ஈசியா நம்ப வைக்க அதை பயன்படுத்திக்காம இருக்கணும் அவ்ளோதான்.டிவிட்டர்லையே பார்த்திருக்கேன் ஹன்சிகா பல்லு விளக்கினியா ஜெனிலியா குளிச்சியா டாப்சீ ரொம்ப பிடிக்கும் ப்ளீஸ் இதை RT பண்ணுங்க நான் உங்க தீவிர ரசிகன் இது போன்ற டெம்ப்ளேட் டயலாக் எல்லாம்.என்னைப் பொறுத்தவரை நான் பின்தொடர்பவர்களை விட அருமையா எந்தப் பிரபலமும் எழுதுவது இல்லை பல விசயங்களிலும் பட்டையை கிளப்பறாங்க.அதனால் நான் எந்தப் பிரபலத்தையும் தொடர்வது இல்லை.எனக்குப் பிடிச்ச பிரபலங்களைப் பார்த்தா நானும் சந்தோசப்படுவேன்.அதற்காகத் தலையில் தூக்கி வைத்து என் பெற்றோர்களை விட  பெருசா அவங்களைக் கொண்டாட மாட்டேன்.
புகழ் என்ற வெளிச்சம் இருப்பதாலேயே அங்க நடப்பதெல்லாம் பெரிய விசயமாகவும் அந்த வெளிச்சம் இல்லாத காரணத்தினாலேயே பலர் உத்தம வேடமிட்டு அலைகிறார்கள் யதார்த்த வாழ்வில்.பிரச்னையை எதிர்கொள்ள முடியாம தற்கொலை பண்ணிகிட்டா ஐயோ பாவம் அந்த நடிகைன்னு பரிதாபப்படும் அதே வாய் சமாளிச்சு வேறு திருமணம் போனா ரெண்டு கல்யாணம் பண்ணவன்னு நக்கல் அடிக்கவும் செய்யுது.மாற்றுக் கருத்துகளுக்கு பழிவாங்கும் மனோபாவம் சாதாரண சராசரி மனிதர்கள் கிட்டேயே இருக்கு.அதிகாரத்தில் இருப்பவர்களை குறை சொல்லி என்ன செய்ய? ஒருவரை மிகக் கேவலமாக விமர்சனம் செய்யும் பொழுது அது அவங்களுக்கும் பொருந்திப் போயிடுதுன்னு யாராச்சும் எடுத்துச் சொன்னாத் தேவலை.நடிகைதானே கவர்ச்சியா நடிச்சா அப்படித்தான் பேசுவோம்ன்னு படு ஆபாசமா கமென்ட் கொடுக்கிறவங்க எல்லாம் பெண்ணுரிமை பேசும் பொழுது இயல்புக்குப் பொருந்தாத  ஒன்றாகிவிடுகின்றது.புகழ் பெற வேண்டும் என்றால் பிரபலமாக இருப்பவரை அல்லது இருக்கின்ற விஷயத்தை எதிர்த்தால் போதுமானது என்று பலர் மனதில் அப்பட்டமா பதிஞ்சுருச்சு.இன்னொரு கூட்டம் எதையாச்சும் ஆதரிக்கனும் இல்லாட்டி எதிர்க்கணும் அப்படி செய்யாட்டி தமிழினத் துரோகி ன்னு பட்டம் கொடுத்திடறாங்க.
குஷ்பூ குட்டைப் பாவாடை போடுதா நமீதா நெக்லஸ் போடுதான்னு கவனிச்சு ஆர்ப்பாட்டம் பண்றதுக்குன்னே ஒரு கூட்டம்.நியாயமான விசயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது தவறு இல்லை.ஆனா தன் இருப்பைக் காட்டிக் கொள்ள பதினைந்து நிமிடப் புகழ் பெற பிரபலங்களைப் பயன்படுத்திக் கொள்(ல்)பவர்களே அதிகமாகிவிட்டதால் எது நியாயம் எனத் தெரியாமலே போயிடுது.
எந்த ஒரு விசயத்தையும் அலசி ஆராயாம கருத்து சொல்வது தேச வியாதி போல.அதுக்கும் எதுவுமே பேசாம அமைதியா இருந்திடலாம் ...DOT