Showing posts with label எனது கிறுக்கல்கள். Show all posts
Showing posts with label எனது கிறுக்கல்கள். Show all posts

Saturday, February 25, 2012

பெரு மூச்சு ஒரு தொகுப்பு

 அதிகம் ரசிக்கப்பட்டவைகளின் ஒரு தொகுப்பு 

நீ புத்தகம் படிக்கின்ற பொழுதெல்லாம்
உன்னிரு கைகளுக்குள் புகுந்து
உன் உறுதியையும் 
படித்துவிட ஆசை எனக்கு
ம்ம்ம்ம் ..படி..dடா.. பார்க்கலாம் ;)
 ********************************************
சுக்கு நூறாகக் கிழித்த 
நினைவுகளை எல்லாம்
மொத்தமாக அள்ளினேன்
சிதறிப் போனது மனது 
******************************
நீயில்லாப் பொழுதுகள்
யாவும் நீள் பொழுதுகளாக..
************************************
பொய்யறிந்த கண்களின் 
கேலியில் உன்னிடம் 
மாட்டிக்கொண்ட மெய்யறிந்து
வெட்கித் தலைகவிழ்ந்தன 
என் இதழ்கள் பற்களுக்குள்...
**************************
முகம் நோக்கித் தூறும்
சாரல்கள் யாவும் 
என் செல்லக் கோபங்களை 
சமாதானம்செய்யத்
தீண்டும்
உன் விரல்கலாகின்றன
"ம்ம்ம்மாமழை"
***************
விலகி செல்லாதே அருகில் வந்தென்
இதழ் ஒற்றி(று) ப்பிழை திருத்து
******************************
எனை எவ்வளவு பிடிக்கும் என 
கைகள் விரித்து சொல்லாதே 
அவ்வளவு பேராசைக்காரி இல்லை நான் 
என் "மெய்"அளவு கை சுருக்கி 
"மெய்" சொல் அதுபோதும்
************************************
உன்னை எவ்வளவு பிடிக்கும் 
எனக் கேட்டால் தெரியாது
உன்னளவு மட்டுமே பிடிக்கும் 
உன்னைத் தவிர வேறு எதுவும் சிறந்ததில்லை 
உதாரணம் சொல்வதற்க்குக்  கூட...
************************************************* 
ஏதோ பண்டிகை என்கிறார்கள் 
திருவிழா என்கிறார்கள் 
நீ வருகின்ற வரையில்
எனக்கு இது மற்றும் ஒரு நாளே !
*********************************************
தேடாதே என் வெட்கங்களை
உன் கேலி சிரிப்புகள் விரட்டி சென்றதால் 
வெட்கப்பட்டு உன் முதுகின் பின்னால் 
ஒளிந்து கொண்டு நிற்கின்றன...
*****************************************
"அசடாகவே"
இருக்க ஆசைப்படுகிறேன்
என் தலை குட்டி 
மூக்கை ஆட்டி 
நீ சொல்கின்ற அழகிற்காகவே!
**********************************
ஒரு கையால்
இடைவளைத்து
மறுகையால் தாடை நிமிர்த்தி
"பேசு"எனக் கெ(கொ)ஞ்சுகிறாய் 
உன் அருகாமையில்
நான் பேச்சிழந்ததை அறியாமல் !
*********************************
தூக்கத்தில் ஆதரவிற்கு அலையும் 
குழந்தையின் கை போல 
பர பரவென எப்பொழுதும் 
உன்னையே தேடி அலையும் மனது
************************************************
பயந்தால்
அணைத்துக் கொள்வாய் 
என அறிந்தே
பயம் கொள்கிறேன் நான்! 
************************************
பெண்ணாக பிறந்தது
பிழையென கருதுகிறேன்
பெண்மை மீறி
மழையென என்
காதலை
பொழிவதற்கு இயலாத போது ...!
******************************
 
 
 
 
 
 

 
 
 

Thursday, December 1, 2011

அம்மா!

அம்மா சமையலைச் சிலாகிக்கும் பாக்கியம் நமக்கு மட்டும்தான் அடுத்த தலைமுறை வீட்டில் வேலைபார்ப்பவர்களைப் பற்றிச் சொல்லக் கூடும் ..
***************************************************************************
உருக்கமா ஒரு பொய் சொல்லிவிட்டால் உடனே நம்பிவிட அம்மாவால்
மட்டுமே முடியும்
******************
பிள்ளைகளிடம் விரும்பி ஏமாறுபவர்கள் ஏமாறுவதை விரும்புபவர்கள் 
அம்மா 
*******
நலமில்லை என பொய்
சொன்னாலேபார்க்காமல்  நம்பிவிடும் அம்மா
நலமாகிவிட்டது என எத்தனை முறை
சொன்னாலும் கண்களால்
அளவெடுத்துக்கொண்டே இருக்கின்றாள்..

***********************************************
  நாலு தடவை சொல்லி விட்டு ஐந்தாவது தடவை மனசில்லாமல் தானே
அந்த வேலையைச் செய்துவிடுவது அம்மாவாகத் தானிருக்க முடியும்
*************************************************************************
சிறு வயதில் அம்மா சீயக்காய் தேய்த்துப் பராமரித்தவரை
கேசம் நன்றாகத் தானிருந்தது #கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் 
**********************************************************************
தலையில் துண்டு கட்டிக் கொண்டு வேலையில் தீவிரம் காட்டும்
வெள்ளிக் கிழமை தேவதைகள் #அம்மா 
*****************************************
அப்பாவின் சுடு சொற்களை விடப்
பெரிதாக அம்மாவின் அடிகள் பாதிப்பதே இல்லை 
***************************************************
சாப்பிடப் பிடிக்காததை உடனே எடுத்துப் போட
அம்மாவின் தட்டு எப்பொழுதும் அருகில் தேவைப்படுகின்றது 
வேண்டாமென ஒதுக்கிய பின்பே தான் உண்ணும் அம்மா 
***********************************************************
அம்மா உணவை ஊட்டுவிட்ட காலங்களில் உணவின் சுவை
இன்னமும் அதிகமாக இருந்தது #ஏக்கம் 
*****************************************
எளிமையாகச் சாப்பிடுவது நல்லது 
அம்மா ஊரில் இல்லாத தருணங்களில் மட்டும்  
ரொம்ப நேரம் யார் சமைக்கிறது :)))
*********************************
பெரும்பாலும் அம்மாவே பெண் குழந்தைகளை புகுந்த வீட்டில் 
எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று மனதளவில் தயார்
செய்து விடுகின்றார்கள் 
*************************


 










Tuesday, November 29, 2011

பெருமூச்சு ...6!

ஆகச் சிறந்த மெத்தை
உன் மார்பு..
************
உன் நினைவுகள்
சம்மணமிட்டு அமர்ந்துகொள்கின்றன
என் இதழ்களில் ...
****************
நீ புத்தகம் படிக்கின்ற பொழுதெல்லாம்
உன்னிரு கைகளுக்குள் புகுந்து
உன் உறுதியையும் 
படித்துவிட ஆசை எனக்கு
ம்ம்ம்ம் ..படி..dடா.. பார்க்கலாம் ;)
*************************************  
அகராதி "பிடித்தவன் நீ 
என் நினைவலைகளில்
என்றுமே நீங்கா இ (அ)டம் 
பிடித்தலைகிறாய்
******************************
எனை அணைக்கும் பொழுதெல்லாம்
என் வெட்கத்தையும் சேர்த்தே
அணைத்து விடுகின்றாய் ;)
***************************
வேண்டாம் தள்ளிப் போ

என்ற முணுமுணுப்புகள் எல்லாம்
காற்றில் எங்கோ தூர
ஒலித்துக் கரைகின்றன
உன் வெற்றிச் சிரிப்பு நெருங்கி வந்தபின்..
*******************************************
என் மறுப்புகள் யாவற்றையும்
அழைப்புகளாய் மாற்றும் 
வித்தை கற்றவன் நீ ..! 
*******************************
என் நாணம் தலை கவிழ்ந்தபின் 
நிமிர்ந்தெழுகின்றதென் மோகம் 
********************************************
காது மடல் கவ்வி 
நீ சொல்லும் மௌனங்களை 
சத்தமாய் வா(இம்)சித்துக் 
கொண்டிருக்கின்றன அங்கங்கள் யாவும்
நி..று..த்..து..
****************
உன்னுடனான ஊடல்
பொழுதுகளின் தவிப்புகளையும்
உன் தோள்களையேத்
தாங்க இறைஞ்சும் 
வெட்கம் கெட்ட மனம்
*******************************

  



Tuesday, October 18, 2011

பெருமூச்சு ...5!

எனது கற்பனைக்காதலனுக்கு சமர்ப்பணம் 

நீயில்லாப் பொழுதுகள்
யாவும் நீள் பொழுதுகளாக..
*******************************
யாதுமாகி நீ நின்றாய்
வேறு யாதொன்றும் 
இல்லாமற் போனது ..
****************************  
விலகி (__ ) செல்லாமல் 
அருகில் வந்து இதழ் 
ஒற்றி(று)ப் பிழை திருத்து..
************************************ 
நான் சிரிக்கப் 
பொறுக்காதவன் நீ 
சட்டென்று என் இதழ் மூடி ... ;)
********************************************************
உன்னால் மட்டுமே உதிர்ந்து விழும்
மணல் கோட்டைக்கு 
"திமிர்"எனப் பெயரிட்டு இருக்கின்றேன்..
******************************************************
சுக்கு நூறாகக் கிழித்த 
நினைவுகளை எல்லாம்
மொத்தமாக அள்ளினேன்
சிதறிப் போனது மனது 
*******************************  
உன் சுளித்த புருவங்களுக்கிடையே
சிக்கித் தவிக்கிறேன் 
சீராக்கி நீ சிரிக்கின்ற வரையில்...
******************************************  
நம் இடைவெளிகளை 
நிரப்பிக் கொண்டிருக்கின்றன
மௌனங்களும் உன் நினைவுகளும்
*************************************************
வெட்ட வெட்ட வளர்கின்றது
-வலி
*******
உச்சி முகர்ந்து நெற்றியில் 
கொடுக்கும் நின்
முத்தங்கள் யாவும் நீ
எனக்களிக்கும் ஆசீர்வாதங்களாகின்றன
********************************************************
உன் தவறுகளை மன்னிக்கும் பொழுது
தாயாகின்றேன்
சண்டையிடும் பொழுதெல்லாம் 
அடித்தாலும் நின் அணைப்பையே
எதிர்பார்க்கும் சேயாகின்றேன் 
*****************************************
என்ன தவறு செய்தது பூமி
இப்படி ஓங்கிக் கொட்டுகிறது
வானம் 
மழைக் கரம் நீட்டி 
"மாமழை"
*************